About: http://data.cimple.eu/claim-review/0951ddcecf7d38d0c06b7cf91cbcf9823b8d017a0e5d9736f89b0807     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: ஜவஹர்லால் நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்ததாக பரவும் படம். Fact: இத்தகவல் தவறானதாகும். 1962 ஆம் ஆண்டில் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. அப்போது நேரு கலவரக் கூட்டத்திற்குள் நுழைய முயன்றபோது பாதுகாப்பு அதிகாரி அவரை தடுத்து பின்னாடி இழுத்துள்ளார். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே தவறான தகவலுடன் பரப்பப்படுகின்றது. “நேருவை, ஸ்வாமி வித்யானந்த் விதேஹ் முகத்தில் பலமாக அறைந்தபோது”. காரணம்! ஒரு விழாவில் நேரு தனது உரையில் “இந்து ஆர்ய சமாஜ்” மக்கள், இந்தியாவில் அகதிகள் என்று கூறினார். விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற சுவாமி வித்யானந்த் விதே ஜி இதைக் கேட்டதும், மேடையிலேயே நேருவை கடுமையாக அறைந்து, மைக்கைப் பிடுங்கி, “ஆர்ய சமாஜ்” மக்கள் அகதிகள் அல்ல, அவர்கள் எங்கள் முன்னோர்களும், இந்த நாட்டின் பூர்வீக குடிகளும். உங்கள் சொந்த முன்னோர்கள் தான் “அரபியர்கள்”, உங்கள் உடலில் “அரபு” இரத்தம் ஓடுகிறது. நீங்கள் இந்த மகத்தான நாட்டின், அசல் குடியிருப்பாளர் அல்ல.. நீங்கள் ஒரு அகதி மேலும், “சர்தார் படேல், இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், இதையெல்லாம் நாங்கள் பார்க்க வேண்டியதில்லை” என்றும் அவர் கூறினார். (மேடையில் குழப்பம் ஏற்பட்டது. அந்தக் காலத்து அரிய புகைப்படம், அதை புகைப்படக்காரர் மிகவும் சிரமப்பட்டு தனது பேண்டில் மறைத்து வைத்திருந்தாராம்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்? Fact Check/Verification ஜவஹர்லால் நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்ததாக கூறி பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி ஆராய்கையில் அசோசியேட்டட் பிரஸ் இணையத்தளத்தில் ‘Nehru almost falls’ என்று தலைப்பிட்டு வைரலாகும் படம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. 1962 ஆம் ஆண்டில் பாடனாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த சண்டையில் நுழைய முயன்ற ஜவஹர்லால் நேருவை பாதுகாப்பு அதிகாரி தடுத்து பின்னாடி இழுத்ததாக அப்படம் குறித்து அசோசியேட்டட் பிரஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கூகுள் நியூஸ் ஆர்க்கைவில் தேடுகையில் தி ஃபுளோரன்ஸ் டைம்ஸ் எனும் செய்தித்தாளில் ஜனவரி 08, 1962 அன்று மேற்கூறிய அதே தகவலை வைரலாகும் படத்துடன் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து தேடுகையில் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் ஜனவரி 06, 1962 அன்று இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாகவும், அந்த அமளியை தடுக்க நேரு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் நுழைய முயன்ற நேருவை தடுத்த பாதுகாப்பு அதிகாரிகளையும், காங்கிரஸ் தலைவர்களையும் நேரு தள்ளியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்க்கையில் வைரலாகும் படத்திற்கும் ஸ்வாமி வித்யானந்த் விதேவுக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது. தொடர்ந்து ஸ்வாமி வித்யானந்த் விதே என்பவர் யார் என்று தேடுகையில் அவர் வேத் சாஸ்தான் எனும் நிறுவனத்தை தோற்றுவித்தவர் என அறிய முடிந்தது. இதுத்தவிர்த்து இவர் நேருவை அறைந்ததாக எந்த ஒரு ஆதாரமோ, தகவலோ நமக்கு கிடைக்கவில்லை. Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி! Conclusion ஜவஹர்லால் நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்ததாக கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். 1962 ஆம் ஆண்டில் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. அப்போது நேரு கலவரக் கூட்டத்திற்குள் நேரு நுழைய முயன்றபோது பாதுகாப்பு அதிகாரி அவரை தடுத்து பின்னாடி இழுத்துள்ளார். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே தவறான தகவலுடன் பரப்பப்படுகின்றது. இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Associated Press Ved Sansthan Google News Archive இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது. (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software