Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்துள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை. இது வரை 200 கும் அதிகமான காமராஜர் சிலைகளை நம் பாரத பிரதமர் மோடி ஜி அரசு திறந்து வைத்துள்ளார். இதை ஊடகங்கள் மறைத்து வருகிறது என்பது வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதா?
உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்துள்ளதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். முன்னதாக சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் காமராஜர் சிலை ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம். இத்தேடலானது flickr இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இத்தளத்தில் ரமேஷ் நாயர் என்பவர் சென்னை மெரினாவில் இருக்கும் காமராஜர் சிலை என்று குறிப்பிட்டு வைரலாகும் படத்தை ஆகஸ்ட் 2, 2009 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து கூகுள் மேப்ஸ் மூலம் சென்னை மெரினாவில் இருக்கும் காமராஜர் சிலையை கண்டறிந்தோம். அச்சிலையானது வைரலாகும் படத்தோடு ஒற்றுப்போவதை நம்மால காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் உத்திரப் பிரதேசத்தில் காமராஜர் சிலை திறந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதும், வைரலாகும் படத்தில் காணப்படும் காமராஜர் சிலை சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் சிலை என்பதும் தெளிவாகின்றது.
Also Read: கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… வைரலாகும் செய்தி உண்மையானதா?
உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Flickr Post, from Ramesh Nair, Dated August 02, 2009
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vasudha Beri
October 22, 2024
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024