schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
அமிதாப் பச்சன் உட்பட அவர் குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேருக்கும் பாஜக ஆளும் உபி அரசு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.50000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க ஏன் உத்தரவிட்டது தமிழக அரசு?
அமிதாப் பச்சன் கும்பத்தாருக்கு பாஜக ஆளும் உபி அரசு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததா தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் அமிதாப் குடும்பத்திற்கு உதவித் தொகை அறிவித்தது பாஜக அரசு அல்ல, சமாஜ் வாடி கட்சிஎனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2015 ஆம் உத்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி கட்சி யாஷ் பாரதி சம்மன் விருது பெற்ற அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.50000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் இவ்விருதைப் பெற்றிருந்ததால் இந்த நால்வருக்கும் இந்த உதவித்தொகையானது தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகவலானது அப்போது ஊடகங்களில் ஊடகங்களில் பெரும் செய்தியாக மாறியது. அதை இங்கே, இங்கே படிக்கலாம்.
இதனையடுத்து அமிதாப் குடும்பத்தினர் தங்களுக்கு உதவித்தொகை தேவையில்லை என்று மறுத்திருந்தனர்.
இதுக்குறித்த ஊடகங்களில் வந்த செய்தி இங்கே, இங்கே படிக்கலாம்.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், அமிதாப் குடும்பத்திற்கு உபி அரசு உதவித்தொகை அறிவித்தது உண்மையே, ஆனால் அது கடந்த 2015 ஆம் வந்த வெளிவந்த அறிவிப்பாகும். அச்சமயம் உத்திரப் பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது பாஜக அல்ல, சமாஜ்வாடி கட்சியாகும்.
Also Read: கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?
அமிதாப் பச்சன் உட்பட அவர் குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேருக்கும் பாஜக ஆளும் உபி அரசு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Times Of India: https://timesofindia.indiatimes.com/india/up-to-give-big-b-jaya-abhishek-rs-50k-pension-a-month/articleshow/49474681.cms
India.com:
One India: https://www.oneindia.com/india/amitabh-bachchan-his-family-members-refuse-to-accept-pension-from-up-govt-heres-why-1906539.html
News X: https://www.youtube.com/watch?v=cJY330i1-GA
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|