schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதால், சில நாட்களுக்கு அவற்றை குடிக்க வேண்டாம் என்று ஐதராபாத் காவல்துறை எச்சரித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில்,
“மாசா, ஃபேன்டா , 7 அப் , கோகோ கோலா , மவுண்டன் டியோ , பெப்சி போன்ற குளிர் பானங்களை வரும் சில நாட்களுக்கு குடிக்க வேண்டாம் , ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒன்றின் பணியாளர் எபோலா என்ற ஆபத்தான வைரஸின் அசுத்தமான இரத்தத்தை அதில் கலக்கியுள்ளார் . இந்த செய்தி என்டிடிவி சேனலில் நேற்று வெளியானது. தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் இத்தகவலை அனுப்பவும். இத்தகவல் இந்தியா முழுவதும் ஹைதராபாத் காவல்துறை மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.”
என குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் தொடர்ந்து தேடியதில் சமூக வலைத்தளங்களில் பலரும் இத்தகவலை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?
குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதால், சில நாட்களுக்கு அவற்றை குடிக்க வேண்டாம் என்று ஐதராபாத் காவல்துறை எச்சரித்ததாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை அறிய முடிந்தது. இத்தகவலானது ஏற்கனவே தமிழ் தவிர்த்து வேறு சில மொழிகளிலும் பரவியுள்ளது. நியூஸ்செக்கர் சார்பில் ஏற்கனவே இந்தி, பஞ்சாபி, மற்றும் பெங்காலி மொழிகளில் இத்தகவல் குறித்து ஆய்வு செய்து இது பொய்யான தகவல் என்று செய்தி வெளியிட்டுள்ளோம்.
வைரலாகும் இத்தகவலில் ஐதராபாத் காவல்துறையினர் எச்சரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ஐதராபாத் காவல்துறையினர் இவ்வாறு ஒரு எச்சரிக்கையை தரவே இல்லை. இதை தெளிவுப்படுத்தி ஐதராபாத் காவல்துறையினர் அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
சமீப காலங்களில் காவல்துறையினர் அறிவித்ததாக அல்லது எச்சரித்ததாக பொய் செய்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அவற்றை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து , அவை பொய்யான செய்தி என்று தெளிவுப்படுத்தியுள்ளோம்.
குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதால், சில நாட்களுக்கு அவற்றை குடிக்க வேண்டாம் என்று ஐதராபாத் காவல்துறை எச்சரித்ததாக பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet, from Hyderabad City police, on July 13, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|