schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: கலவரம் செய்யும் மதவெறி ஜிஹாதிகளின் கோரமுகம்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
ஹரியானா வன்முறையுடன் தொடர்பு படுத்தி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. “நாடு முழுக்க அப்பாவி பொது மக்களின் மீது.. அரசாங்க சொத்துக்கள் மீதும் கல் எறிந்து கலவரம் செய்யும் மதவெறி ஜிஹாதிகளின் கோரமுகம்…” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று கேள்வி எழுப்பினாரா சீமான்?
ஹரியானா வன்முறையுடன் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ஃப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், குறிப்பிட்ட வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது நமக்கு உறுதியானது.
மேலும், வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள சிட்டிலிங்க் என்கிற பேருந்து வாசகம் மூலமாக அது குஜராத் மாநிலம் சூரத்தின் பொதுபோக்குவரத்து பேருந்து என்பதை நம்மால் அறிய முடிந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து ஜூலை 05, 2019 அன்று Divyang News Channel என்கிற சேனலிலும் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருப்பது போன்ற சேதமடைந்த பேருந்து ஒன்றைக் காண முடிந்தது. மேலும், இரண்டு வீடியோக்களிலும் பின்னணி இடமும் ஒன்றே என்பதை அறிய முடிந்தது.
சூரத் குவாஜாதானா தர்காவில் இருந்து மக்காய் குளம் வரை நடைபெற்ற VMF என்கிற அமைப்பு நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்களால் ஏற்பட்ட சேதம் என்பதாக இந்த செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் இடம்பெற்றுள்ளது.
ABP Asmita சேனலிலும் இந்த குறிப்பிட்ட வீடியோ இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு சூரத் வன்முறையில் எடுக்கப்பட்ட காட்சி என்பது உறுதியாகிறது.
Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?
ஹரியானா வன்முறையுடன் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு சூரத் வன்முறைச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Times of India, Dated July 06, 2019
YouTube Video From, Divyang News Channel, Dated July 05, 2019
YouTube Video From, ABP Asmita, Dated July 05, 2019
(இக்கட்டுரை Newschecker இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|