schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
இந்தியப் பிரதமர் மோடி சபரிமலைக்கு சென்றதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?
பிரதமர் மோடி சபரிமலைக்கு சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் வீடியோவில் M7 நியூஸ் எனும் லோகோ இடம்பற்றிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் வைரலாகும் வீடியோவில் இருப்பது பிரதமர் மோடி அல்ல, அது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் என்பதை அறிய முடிந்தது.
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தலையில் இரு முடி அணிந்து சபரிமலைக்கு சென்று, அங்கிருக்கும் இந்து கடவுளான ஐயப்பனை வழிபட்டார். இது குறித்து M7 நியூஸ் வெளியிட்ட செய்தியை திரித்தே பிரதமர் சபரிமலை சென்றதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
கேரள கவர்னர் சபரிமலை சென்றதை M7 நியூஸ் தவர்த்து வேறு சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. அதை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதா?
இதை தவிர்த்து கேரள ஆளுநரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் ஆரிஃப் முகமது கான் சபரிமலை சென்றது குறித்து ஏப்ரல் 11, 2022 அன்று டிவீட் செய்யப்பட்டுள்ளது.
Also Read: மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரை முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதாக பரவும் வீடியோ!
இந்தியப் பிரதமர் மோடி சபரிமலைக்கு சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ஒரு ஆண்டுக்கு முந்திய பழைய வீடியோ என்பதும், அவ்வீடியோவில் இருப்பது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
Also Read: வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
Sources
YouTube Video By M7 News, Dated April 11, 2021
Tweet, from Kerala Governor, Dated April 11, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 28, 2024
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 16, 2024
|