schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் 1989 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தக் கூட்டத்தில், முன்னாள் துணைப் பிரதமர் தேவிலால் அவர்களின் உரையை மொழிப்பெயர்த்ததாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சென்னை விமான நிலையத்தில், கனிமொழி அவர்கள் தன்னுடன் இந்தியில் பேசிய மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை(CISF) அதிகாரியிடம், தனக்கு இந்தித் தெரியாது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறுக் கேட்டதற்கு, நீங்கள் இந்தியரா? என்று அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிகழ்வு இந்தியாவெங்கும் பேசுப்பொருளாக மாறியது. இதனையடுத்து 1989 ஆம் ஆண்டு தேவிலால் அவர்கள் இந்தியில் பேசினார். அதை கனிமொழிதான் மொழிப் பெயர்த்தார். ஆகவே அவருக்கு இந்தி தெரியும். இது வேண்டுமென்றே அரசியல் ஆதாரத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை என்று சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று பரவி பதிவிடப்பட்டது.
இதன்பின் இவர் கருத்தை ஆதரிக்கும் விதமாக பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருந்தனர். அப்போது பொதுக்கூட்டத்தில் கனிமொழிக் கலந்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தனர்
வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.
வைரலாகும் செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்தோம். அப்போது அதுக்குறித்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில், சமூக வலைத் தளங்களில் வைரலாகும் படம் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதே இல்லை. இது நடிகர் சிவக்குமார் அவர்கள் வீட்டில், அவர் வரைந்த ஓவியங்களை கலைஞர் பார்வையிட்டப்போது எடுக்கப்பட்டப் படம்.
கெளசிக் என்பவர் 2017 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்நிகழ்வுக் குறித்தப் புகைப்படங்களைப் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை எடிட் செய்தே, கனிமொழி தேவிலால் உரையை மொழிப்பெயர்த்ததாக பரப்பி வருகின்றனர்.
எடிட் செய்யப்பட்டப் படத்தையும், உண்மையானப் படத்தையும் வாசகர்களின் புரிதலுக்காகக் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதன்மூலம் வைரலாகும் புகைப்படம் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று நம்மால் அறிய முடிகிறது.
வைரலாகும் புகைப்படம் தவறு என்பது உறுதியாகியப்பின், உண்மையில் தேவிலால் அவர்களின் உரையை மொழிப் பெயர்த்தது யார் என்று நாம் தேடினோம்.
அப்போது, தேவிலால் பேச்சை மொழிப் பெயர்த்தது நான்தான் என்று ஓய்வுப் பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் கூறியதாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டதை நம்மால் காண முடிந்தது. அதில்,
“தேவிலால் ஹிந்தி பேச மாட்டார். உருது கலந்துதான் பேசுவார். கனிமொழிக்கு அப்போது 20 வயது இருக்கலாம். ஹெச்.ராஜா தவறாக சொல்லியிருக்கிறார்.
நான் ஹரியானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியபோது தேவிலால் ஹரியானா முதல்வராக இருந்தார். அதனால், என்னை அவருக்குத் தெரியும். தேவிலால் 1989 டிசம்பர் மாதம் துணை பிரதமர் ஆனார். அவர் துணை பிரதமர் ஆன பிறகு, தமிழ்நாட்டுக்கு 2 நிகழ்ச்சிகளுக்காக வந்தார்.
முதலில், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தேவிலால் கலந்துக் கொண்டார். எனக்கு உருது தெரியும் என்பதால், தேவிலால் அவருடைய உரையை மொழிப்பெயர்க்கக் கேட்டுக்கொண்டதால், நான் அந்த உரையை மொழிப் பெயர்த்தேன்.
அதற்குப் பிறகு, மற்றொரு முறை துணை பிரதமர் தேவிலால் தமிழ்நாடு வந்தார். அப்போது, தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட இருந்த சூழ்நிலையில், தமிழகம் மத்திய அரசிடமிருந்து கூடுதல் ஒதுக்கீட்டைக் கேட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சென்னை வந்த துணை பிரதமர் தேவிலாலை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தேவிலால் என்னையும் அழைத்துச் சென்றார்.
கருணாநிதியை பார்த்தப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதையும் நான்தான் மொழிப் பெயர்த்தேன்.”
என்று தேவ சகாயம் அவர்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை மேலும் சில ஊடகங்களும் வெளியிட்டிருந்தது. அதை இங்கே, மற்றும் இங்கே படிக்கலாம்.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் கனிமொழி அவர்கள் தேவிலால் அவர்களின் இந்தி உரையை தமிழில் மொழிப்பெயர்த்தார் என்று பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்று நமக்குத் தெளிவாகிறது. உண்மையில் அதை மொழிப் பெயர்த்தது முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் ஆவார்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Tamil Indian Express: https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-dmk-mp-bjp-leader-h-raja-controversy-hindi-language-devasagayam-ias-translated-devilal-speech-214183/#
Puthiya thalaimurai: http://www.puthiyathalaimurai.com/newsview/76918/Retried-IAS-officer-Devasahayam-said–he-was-person-translate-Hindi-to-Tamil-betweet-Devi-Lal-and-Karunanidhi-talks
Thagadur.com: https://thagadur.com/2020/08/12/retried-ias-officer-devasahayam-said-he-was-person-translate-hindi-to-tamil-betweet-devi-lal-and-karunanidhi-talks-html/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 31, 2025
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
|