Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும், வேண்டுமென்றே மக்களையும் மாணவர்களையும் உதயநிதி குழப்பி வருகின்றார்” என்று காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கார்த்தி சிதம்பரம் மேற்காணும் கருத்தை பேசியுள்ளாரா என்பதை தெளிவுப்படுத்த அவரின் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை அறிய முடிந்தது. கார்த்தி சிதம்பரமே இத்தகவலை பொய் என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.
உதயநிதி குறித்து கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது என உறுதியாகியவுடன், வைரலாகும் தகவல் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என தந்தி தொலைக்காட்சி தரப்பில் வெளியிடப்பட்டிருந்த மறுப்பை நம்மால் காண முடிந்தது.
Also Read: நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?
நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக கூறி பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025