schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: சீமான் டிவிட்டர் கணக்கை முடக்கியது சென்னை காவல்துறை.
Fact: சென்னை காவல்துறை இத்தகவலை மறுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியின் பலரது டிவிட்டர் கணக்குகள் அண்மையில் முடக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை காவல்துறையே சீமான் டிவிட்டர் கணக்கை முடக்கியதாக சமூக ஊடக பிரபலம் சவுக்கு சங்கர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திமுக ஆட்சியை விமர்சித்து பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?
சீமான் டிவிட்டர் கணக்கை சென்னை காவல்துறை முடக்கியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் இத்தகவல் பொய்யானது என அறிய முடிந்தது.
சென்னை பெருநகர் காவல்துறை வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
அந்த அறிக்கையில், நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், இது போன்ற தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து தேடுகையில் சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம் குறித்து டிவிட்டர் தரப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் விளக்கத்தை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
அதில், இந்தியாவின் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதால் மத்திய அரசின் பரிந்துரையின்படி சீமான் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் முதலைமைச்சர் ஸ்டாலின் இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அவருக்கு சீமான் புதிதாக தொடங்கப்பட்ட அவரது டிவிட்டர் கணக்கிலிருந்து நன்றி தெரிவித்த பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. அப்பதிவில் அவரது டிவிட்டர் கணக்கு முடக்கத்துக்கு மத்திய அரசே காரணம் என்று அவர் சாடி இருந்தார்.
Also Read: ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?
சீமான் டிவிட்டர் கணக்கை சென்னை காவல்துறை முடக்கியதாக சவுக்கு சங்கர் பரப்பிய தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet from Greater Chennai Police, Dated June 01, 2023
Tweet from Durai Murugan, Dated June 01, 2023
Tweet from Seeman, Head, NTK, Dated June 01, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 11, 2025
Ramkumar Kaliamurthy
January 29, 2025
Ramkumar Kaliamurthy
January 29, 2025
|