schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி பிரபு என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு!
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். நியூஸ் 7 தமிழ் இதை உறுதி செய்துள்ளது.
“கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு; பிரபு மீது 10ʻக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதா டிராய்?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி பிரபு என்பவர் தேடப்படுவதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் இவ்வழக்கில் கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜை போலீசார் கைது செய்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அதேபோல் தினமணியிலும் கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் (49) , அவரது மனைவி விஜயா (42), தம்பி தாமோதரன்(40) ஆகியோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆய்வு செய்கையில் கோவிந்தராஜ், விஜயா, மற்றும் தாமோதரன் ஆகியோரை குற்றவாளி என்று குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் கோவிந்தராஜ் என்பவரே கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார் என அறிய முடிகின்றது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்டிலோ பிரபு என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அவர் அதிமுக நிர்வாகி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைத்தகவலுக்கு புறம்பாக இருப்பதை காண முடிகின்றது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டு நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டில் உள்ளதால் அந்த ஊடகம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருக்கப்படவில்லை என அறிய முடிந்தது.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று அவர் தெளிவு செய்தார்.
தொடர்ந்து, நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தவறான வீடியோ!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி பிரபு என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from News 7 Tamil, Dated June 20, 2024
Report from Dinamani, Dated June 20, 2024
Phone Conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil
X post from News 7 Tamil, Dated June 20, 2024
Police FIR
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 4, 2024
Ramkumar Kaliamurthy
June 28, 2024
Ramkumar Kaliamurthy
June 27, 2024
|