About: http://data.cimple.eu/claim-review/9703582c569f80684625df6e64be62f8ba6730c8e4ca3c554821b384     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check மைசூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று பரவி வருகின்றது. இது உண்மையானதா என்று கேட்டு, வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான என்கிற எண்ணுக்கு இத்தகவலை அனுப்பி இதுக்குறித்து குறித்து விசாரித்திருந்தார். நாம் மேற்கொண்டு தேடுகையில் பலரும் இத்தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. Also Read: ஸ்மிருதி இராணி மகளின் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக பரவும் புகைப்படத்தின் பின்னணி! சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். மைசூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறையில் அதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து தேடினோம். இத்தேடலில் JJPD Producciones எனும் யூடியூப் சேனலில் கடந்த ஜூலை 17ஆம் தேதி “Aterradora Sirena captada en video 2022 – Real o mito?”என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது. இவ்வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில், வீடியோவில் காணப்படும் காட்சிகள் யாவும் புனையப்பட்டது என்றும், அவை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்ததது. இதனடிப்படையில் பார்க்கையில் காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதும், வைரலாகும் வீடியோவில் காணப்படும் கடற்கன்னி உண்மையானது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்பதும் அறிய முடிகின்றது. Also Read: 1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதா? மைசூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவானது முற்றிலும் பொய்யானது என நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். Sources JJPD Producciones’s Youtube video, pubished on 17/07/2022 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Komal Singh October 4, 2024 Ramkumar Kaliamurthy August 2, 2024 Ramkumar Kaliamurthy June 30, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software