schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
துபாய் மசூதியில் இஸ்லாமிய பெண்கள் ராம பஜனை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”துபாயில் ஒரு புதிய சகாப்தம். இஸ்லாமிய பெண்கள் மசூதியில் ராம் பஜனை செய்கிறார்கள், அவர்களின் கணவர்கள் ஷேக்குகள் ஆதரவாக கைதட்டுகிறார்கள். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை நமது 135 கோடி இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாகிஸ்தான் உணவுப் பஞ்சத்தின் தற்போதைய நிலை என்று பரவும் பழைய வீடியோ!
துபாய் மசூதியில் இஸ்லாமிய பெண்கள் ராம பஜனை என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, இந்த வீடியோ கடந்த பல வருடங்களாகவே பரவி வருகின்ற நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டே அந்த வீடியோ கொரோனாவைக் குணமாக்க இஸ்லாமியர்கள் பஜனை என்பதாகப் பரவிய நிலையில், நம்முடைய நியூஸ்செக்கர் இந்தி பதிப்பில் இதன் உண்மையறியும் சோதனையை வெளியிட்டுள்ளோம்.
தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் இஸ்லாமிய பக்தர்கள் பக்ரைன், ஈரான், குவைத், ஓமன் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்கள் என்பது தெரிய வந்தது.
கடந்த ஜூலை 2012 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் அமைந்துள்ள சத்ய சாய் ஆசிரமமான “பிரசாந்தி நிலையம்” ஸ்ரீ குல்வந்த் ஹாலில் நடைபெற்ற நிகழ்வான “Sarva Dharma Swaroopa Sai”ல் இவர்கள் கலந்து கொண்டு சாய் பஜன்கள் மற்றும் பாடல்களைப் பாடியுள்ளனர் என்பதும் தெளிவாகியது.
பிரசாந்தி நிலையத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் இந்த நிகழ்வின் முழு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதிலுருந்து, குறிப்பிட்ட வைரல் வீடியோ இந்தியாவில் புட்டபர்த்தி சத்ய சாய் ஆசிரமத்தில் எடுக்கப்பட்டது; துபாய் மசூதியில் அல்ல என்பது உறுதியாகிறது.
Also Read: வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா?
துபாய் மசூதியில் இஸ்லாமிய பெண்கள் ராம பஜனை என்று பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report From, ColomboTelegraph, Dated July 28, 2013
YouTube Video From, Sri Sathya Sai Official, Dated July 17, 2012
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|