About: http://data.cimple.eu/claim-review/af10d016ed4006aaac8bbb5c7200ec8017992caa4c721ff19807f459     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. Fact: வைரலாகும் படத்தில் காணப்படும் துறவியின் உடல் மங்கோலியாவில் கடந்த 2015 ஆண் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். “முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த மகான் தற்போது நமக்கு காட்சி அளிப்பது மிகப் பெரிய பாக்கியம். வள்ளியூர் கோவிலை புதுப்பிக்க மண் தோண்டிய போது சித்தர் கீழ் கண்ட யோக நிலையில் அமர்ந்து காட்சி அளித்துயுள்ளார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றனரா? வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் படத்தில் காணப்படும் துறவியின் உடல் மங்கோலியா நாட்டில் கண்டுப்பிடிக்கபட்டதாக கூறி ஐரிஷ் மிர்ரர் எனும் ஊடகம் ஜனவரி 28, 2015 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. தொடர்ந்து தேடுகையில் பபிசியிலும் இந்த உடல் குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இந்த துறவியின் உடலை ஒருவன் கள்ளச்சந்தையில் விற்க முயலும்போது, மங்கோலிய போலீசார் அவனை கைது செய்து, துறவியின் உடலை மீட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இந்த துறவியின் உடல் மங்கோலியாவில் கண்டறியப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம். Also Read: அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்? வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்தில் காணப்படும் துறவியின் உடல் கடந்த 2015 ஆம் ஆண்டு மங்கோலியாவில் கண்டறியப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Report from Irish Mirror, Dated Jan 28, 2015 Report from BBC, Dated February 04, 2015 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software