schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim
மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படம்.
Fact
வைரலாகும் புகைப்படம் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்ததல்ல. மற்றொரு புகைப்படக்கலைஞரான ஜாக்சன் ஹெர்பி என்பவரால் எடுக்கப்பட்டதாகும்.
மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படம் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்து ஒன்றில் காலமானார். இந்நிலையில், ”தமிழக அரசின் கொரோனா உதவி தொகை பெற்ற மூதாட்டியை புகைப்படம் எடுத்து புகழ் பெற்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் இன்று விபத்தில் காலமானார்” என்று புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
News 18 தமிழ்நாடு இப்புகைப்படத்தை ஸ்டாலின் ஜேக்கப் எடுத்ததாக செய்தியில் தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!
மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படம் என்று பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அரிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்கள் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியை புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பி புகைப்படம் எடுத்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுகுறித்த செய்திகளும் கலைஞர் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்த புகைப்படமே தற்போது மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்ததாக பரவி வருகிறது. ஜாக்சன் ஹெர்பியிடம் இதுகுறித்து கேட்டபோது, “நான் எடுத்த இந்த புகைப்படம் தவறுதலாக ஸ்டாலின் ஜேக்கப் பெயரில் பரவுகிறது” என்று விளக்கமளித்தார். மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் கோவையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Fact Check: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று பரவும் தவறான வீடியோ!
மறைந்த புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படம் என்று பரவுகின்ற மூதாட்டி ஒருவரின் நிழற்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News Report From, Kalaignar Seithigal, Dated August 24, 2022
Conversation With, Photographer Jackson Herby
Facebook Post From, Jackson Herby
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
|