Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் என்று பரவும் புகைப்படம்
Fact:வைரலாகும் புகைப்படம் தவறானதாகும். அப்புகைப்படத்தில் இருப்பவர் கவிதா சிங் ஆவார்.
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்கிற செய்தி புகைப்படம் ஒன்றுடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“நெல்லை இருட்டுக்கடை அல்வா ஓனர் சுலோச்சனா திடீர் மரணம் கடை நல்லா போயிட்டு இருந்துச்சு சார், அல்வா திங்க ஒருத்தன் வந்தான்..” என்று இந்த தகவல் புகைப்படத்துடன் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பை வெளியிட்டதா புதிய தலைமுறை?
Fact Check/Verification
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் முதலமைச்சருடன் இருட்டுக்கடையினர் இடம்பெற்றிருக்கும் புகைப்படமும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறான பதிவுகளும் இடம்பெற்றிருந்த நிலையில் அப்புகைப்படம் குறித்து இருட்டுக்கடை அல்வா கடையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.
அதில், குறிப்பிட்ட புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் இன்றைய நிர்வாகியான கவிதா சிங் என்பது தெளிவாக செய்தியாக இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, காலமான சுலோச்சனா குறித்து இன்றைய நிர்வாகியான கவிதா சிங்கை தொடர்பு கொண்டு பேசியபோது அவர், “இருட்டுக்கடையின் தற்போதைய உரிமையாளர் மற்றும் நிர்வாகி நான் தான். என்னுடைய புகைப்படத்துடன் இச்செய்தியை தவறான அரசியல் நோக்கில் பரப்பி வருகின்றனர். காலமான சுலோச்சனா என்னுடைய அத்தை. 90 வயதான அவர் நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். நீண்ட கால உடல்நலக்குறைவால் அவர் காலமாகியுள்ளார். என்னுடைய மகளின் திருமணம் நடைபெற்று சில நாட்களே ஆகியுள்ளது. இந்நிலையில், இந்த பொய்யை பரப்பி வருகின்றனர். ” என்று விளக்கமளித்தார்.
எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறுடன் கவிதா சிங் அவர்களின் புகைப்படம் தவறான நோக்கில் பரவுகிறது என்பதும் இதன்மூலமாக தெளிவாகிறது.
Also Read: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் எடிட் வீடியோ!
Conclusion
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் இருப்பவர் இன்றைய உரிமையாளர் மற்றும் நிர்வாகியான கவிதா சிங் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Phone Conversation with Kavitha Singh, Dated February 10, 2025
Iruttukkadai Halwa Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.