schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
இணையத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் பூக்களை வைத்து பரவும் தவறான தகவல்கள் அதிகம். குறிப்பாக, இமயமலையில் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் என்பதாக பரவுகின்ற புகைப்படத்தகவல்கள் ஏராளம்.
அவ்வகையில், “இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் புனிதமான மகாமேரு என்று அழைக்கப்படும் அமலபர்ணி மலர் இது. புகைப்படங்களில் மட்டுமே நம் தலைமுறை பார்க்க முடியும். தயவுசெய்து பகிரவும். மற்றவர்களும் இதைப்பார்க்கட்டும்” என்பதாக கூம்பு வடிவ மலர் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறினாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?
இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட மலர் புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவது நமக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது புகைப்படத்தில் இருக்கும் மலரின் உண்மையான தாவரவியல் பெயர் Rheum nobile என்பது நமக்குத் தெரியவந்தது. இமயமலைப் பகுதியில் வளரக்கூடிய மிகப்பெரிய தாவர வகையைச் சேர்ந்தது. நேபாளம், சிக்கிம், பூட்டான், திபெத் ஆகிய மலைத்தொடர்களில் 4000 மீட்டர் உயரத்தில் வளரக்கூடிய தாவரம் இது.
இமயமலைப்பகுதியில் வளரக்கூடிய தாவரம் என்றாலும் கூட, இது 400 வருடங்களுக்கு ஒருமுறை எல்லாம் வளரக்கூடியது அல்ல. 2 மீட்டர் அளவில் வளரக்கூடிய இதற்கு சிக்கிம் ரூஹுபார்ப் (அ) நோபெல் ரூஹுபார்ப் என்கிற பெயரும் உண்டு. ப்ளவர்ஸ் ஆஃப் இந்தியா என்கிற இணையப்பக்கத்தில் இந்த மலர் வகை, ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் The Alpine Garden Society என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2011 ஆம் ஆண்டு இம்மலரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் வளரக்கூடியது என்றாலும் இது 400 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் பூ அல்ல; இதன் பெயர் மகாமேருவும் அல்ல என்பது உறுதியாகியது.
இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|