schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டது என கடவுள் கொடுத்த நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து – திருவாவடுதுறை ஆதினம்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
“இது பேரழிவிற்கான நிமித்தம் ஆகும். ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள் விபத்தின் காரணமாக துர்மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல.
இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என கடவுள் கொடுக்கும் நிமித்த சேதியாக கூட இருக்கலாம்” என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?
தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக ஒடிசா ரயில் விபத்து குறித்து திருவாவடுதுறை ஆதினம் ஏதும் கருத்து கூறினாரா என தேடினோம். அதில் இந்த விபத்து துரதிஷ்டவசமானது என்று ஆதினம் கூறியதாக தினமலர் செய்தி ஒன்றை ஜூன் 03, 2013 அன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் இதில் செங்கோல் குறித்து எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
“ரயில் விபத்து துரதிஷ்டவசமானது. இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பும், காயம் ஏற்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் துயரத்தை விளைவித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். மீட்பு பணிகள் செம்மையாக நடைபெறவும், காயமுற்றோர் விரைவில் நலம் பெற வேண்டி நமது ஆன்மாத்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடிகளைப் பிரார்த்திக்கின்றோம்.
மத்திய அரசு, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மக்களை காப்பாற்றும் பணி பாராட்டுக்குரியது. இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளோர் மனவலிமையுடன் பணியாற்ற பிரார்த்திக்கின்றோம்” என்று திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கூறியதாக தினமலர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்து.
தொடர்ந்து தேடியதில் திருவாவடுதுறை ஆதினத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
இப்பதிவிலும் செங்கோல் குறித்து எதுவும் பேசப்பட்டிருக்கவில்லை. எனவே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஜெயா பிளஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள ஜூன் 04, 2023 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.
தொடர்ந்து தேடுகையில், 75 ஆண்டுகளாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிநெறி தவறாமல் நடப்பதற்காக தான் செங்கோல் கொடுக்கப்படுவது. நீதி உடன் நடக்கவில்லை என்றால் செங்கோல் நிச்சயம் கடவுள் வடிவில் தண்டிக்கும் என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக மே 26, 2023 அன்று இந்நிறுவனம் நியூஸ்கார்ட்ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்
இதனையடுத்து ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என சேனல் தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜெயா பிளஸின் சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தெளிவு செய்து பதிவு வெளியிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
Also Read: பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!
தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Dinamalar, Dated June 03, 2023
Facebook Post From Jaya Plus, Dated May 26, 2023
Facebook Post From Jaya Plus, Dated June 05, 2023
Phone Conversation With Senthil, Jaya Plus Dated June 05, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|