schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்று ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்ததாக பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட்தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருந்தால், தனது சாதனைகளை ரவி முறியடித்திருப்பார் எனவும் கூறினார்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்றாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?
சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்று ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு (Font) வழக்கமாக சன் நியூஸில் பயன்படுத்தும் எழுத்துரு இல்லை. அதேபோல் சன்நியூஸ் நியூஸ்கார்டுகளில் பயன்படுத்தப்படும் லோகோ வாட்டர்மார்க் இக்கார்டில் பாதி அழிக்கப்பட்டிருந்தது.
இவற்றையெல்லால் வைத்து பார்க்கையில் ஆளுநர் நேற்று சட்டசபையிலிருந்து பாதியில் வெளியேறிய நிகழ்வை கிண்டல் செய்யும் விதமாகவே இந்த நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என உணர முடிந்தது. இருப்பினும் இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்திருப்பதால் இதை முறையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.
முன்னதாக, சன் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இதில் நாம் நினைத்தது போலவே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதற்கான தரவுகள் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்தார்.
Also Read: ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?
சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்தேன் என்று ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Manoj, Digital Head, Sun News January 10, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|