schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தன்னை இந்து தீவிரவாதி என்று கூறிக்கொண்டு அம்பேத்கர். பெரியார் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாக பேசியவர் யூடியூபர் கிஷோர் கே சாமியின் தூண்டுதலாலேயே பேசினார் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்பவர் தன்னைத்தானே இந்து தீவிரவாதி என்று கூறிக்கொண்டு அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாக பேசியதால், சமீபத்தில் அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், “பெரியார், அம்பேத்கர் பற்றி இழிவாக பேசினால் இரண்டு லட்சம் தருவதாக கிஷோர் கே சாமி சொன்னதால்தான் என் மகன் அவ்வாறு பேசினார். கிஷோர் கே சாமியை கைது செய்து, என் மகனை வெளியில் கொண்டடு வாருங்கள்” என்று கைது செய்யப்பட்டவரின் தாய் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?
இத்தகவலை நியூஸ்செக்கரின் ஹெல்ப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு பகிர்ந்து வாசகர் ஒருவரும் பகிர்ந்து இதன் உண்மைத் தன்மை குறித்து கேட்டிருந்தார். ஆகவே இதன் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கிஷோர் கே சாமி சொன்னதால்தான் என் மகன்அம்பேத்கர், பெரியார் குறித்து தவறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டவரின் தாய் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்டை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாலிமர் தொலைக்காட்சியின் சார்லஸை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தேடியதில், கிஷோர் கே சாமியும் இந்த தகவல் பொய்யானது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கும்போது யூடியூபர் கிஷோர் கே சாமியை தொடர்புப்படுத்தி வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகின்றது.
Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
கிஷோர் கே சாமி சொன்னதால்தான் என் மகன்அம்பேத்கர், பெரியார் குறித்து தவறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டவரின் தாய் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Newschecker Conversation
Kalaignar News Report
Kishor K Swamy’s Tweet
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 23, 2025
Ramkumar Kaliamurthy
January 23, 2025
Ramkumar Kaliamurthy
January 10, 2025
|