schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் இனிமேல் ஒரு வயது குழந்தைக்கும் கூட கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
Also Read: பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றாரா நயினார் நாகேந்திரன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.
PIB (Press Information Bureau வாயிலாக ரயில்வே அமைச்சகம் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில்,
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
PIBயும் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இத்தகவலை டிவீட் செய்துள்ளது.
மேலும் தேடுகையில் வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே போன்றவைகளும் வைரலாகும் தகவல் தவறானது என்று டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் 2020ஆம் ஆண்டின் சுற்றறிக்கை குறித்து தெரிவித்திருந்தது. அச்சுற்றறிக்கையை ஆய்வு செய்ததில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கட்டண விவரம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நியூஸ்செக்கர் சார்பில் IRCTC இணையத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை பரிசீலணை செய்தோம்.
IRCTC இணையத்தளத்தில் குழந்தைகளுக்கு இரண்டு விருப்பங்கள் தரப்பட்டிருந்தது. ஒன்று, ‘Add infant with birth’ (குழந்தைக்கு படுக்கை தேவை) , மற்றொன்று ‘Add infant without birth’ (குழந்தைக்கு படுக்கை தேவை இல்லை).
‘Add infant without birth’ விருப்பத்தை நாங்கள் தேர்வு செய்தபோது, தனியாக டிக்கட் வாங்கத் தேவையில்லை என்று பாப் அப் ஒன்று வந்தது (இதையே ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது).
அடுத்தக் கட்டத்தில், ஒருவருக்கான டிக்கட் கட்டணம் கேட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ‘Add infant with birth’ விருப்பத்தை தேர்வு செய்தபோது இருவருக்கான கட்டணம் கேட்கப்பட்டதை காண முடிந்தது.
Also Read: வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
(இந்த கட்டுரையானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
Sources
PIB’s Tweet, tweeted on 17/08/2022
Railway Ministry’s Press Release
Railway Ministry’s Circular
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|