schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மழைநீர் தேங்கியுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழக அரசும் தேங்கிய நீரை வடிகட்ட பல முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ள கொளத்தூர் தொகுதியில், அவரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மழைநீர் சூழ்ந்துள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மழைநீர் தேங்கியுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் இப்படமானது ஒரு வருடத்திற்கு முந்திய பழைய படம் என்பதை அறிய முடிந்தது. கடந்த வருடம் நவம்பர் 28 ஆம் தேதி கார்த்திகை செல்வம் என்பவர் இதே படத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலும் தேடுகையில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு ஜூன் 11, 2022 அன்று முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
இந்த அலுவலகத்தின் தற்போதைய தோற்றம் வைரலாகும் புகைப்படத்திலிருந்து மாறுபட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக புதிய அலுவலக படத்தையும் வைரலாகும் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் புகைப்படம் பழைய படம் என்பது உறுதியாகின்றது.
Also Read: மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தாரா அண்ணாமலை?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மழைநீர் தேங்கியுள்ளதாக வைரலாகும் புகைப்படம் பழைய படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post, from Twitter User on Nov 28, 2021
YouTube Video, from Kalaignar Tv, on June 11, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|