schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு யோசிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.
சேலம், கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுகளில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக நீடிப்பார்” என்று பேசினார்.
இந்நிலையில், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல. தளபதி பிரதமர் ஆன பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறோம்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துபாயின் புர்ஜ் கலிபாவில் முஷ்கானின் புகைப்படம் இடம்பெற்றதா?
தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டில் பிழைகள் இருந்ததால் அதன் செய்தி உண்மையா என்பது குறித்து ஆராய்ந்தோம். ஆனால், அமைச்சர் கே.என்.நேரு அப்படி கூறியதாக செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
தொடர்ந்து, தந்தி டிவியின் பெயரில் குறிப்பிட்ட நியூஸ் கார்டு பரவி வருதால் அதுகுறித்து தந்தி டிவி இணை ஆசிரியர் அசோகவர்ஷினையைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் செயலாளர் பிச்சையப்பனை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் குறிப்பிட்ட செய்தி போலியானது; தவறான நோக்கில் பரப்பப்படுகிறது என்று தெளிவாகத் தெரிவித்தார்.
தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Thanthi Tv
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|