schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
PFI அமைப்புக்கு தடை விதித்ததால் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அது தொடர்புடைய சில இயக்கங்களை சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தவதாக மத்திய அரசு நேற்றைய முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில், இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக உயரும் என்று ஜே.பி.நட்டா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
PFI அமைப்புக்கு தடை விதித்ததால் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
வைரலாகும் நியூஸ்கார்டானது மாலை மலர் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், உண்மையிலேயே அந்நிறுவனம் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அறிய, மாலை மலர் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில், ‘மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற பாரதிய ஜனதா புதிய வியூகம்- பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை’ என தலைப்பிட்டு மாலை மலர் நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டின் எழுத்துப் பகுதியை மட்டும் மாற்றி, PFI அமைப்புக்கு தடை விதித்ததால் டாலருக்கு இணையாக எதிரான ரூபாய் மதிப்பு உயரும் என்று நட்டா கூறியதாக மாற்றியுள்ளனர். வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து, மாலை மலரின் சமூக ஊடகப் பொறுப்பாளரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், “இந்த நியூஸ்கார்ட் முற்றிலும் போலியானது. எங்கள் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட் வெள்ளையாக இருப்பதனால் பலரும் இதுபோல் திரித்து பரப்புகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
Also Read: அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?
PFI அமைப்புக்கு தடை விதித்ததால் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet, from Malaimalar, Dated September 28, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|