schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பாலிமர் நியூஸின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
இந்த நூற்றாண்டில் புயல், வெள்ளம் எனும் பல பேரிடர்களை நாம் கண்டுள்ளோம். ஆனால் கொரானாத் தொற்று இவை எல்லாற்றையும் விட பெரும் தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தியது.
ஏறக்குறைய ஒரு வருடங்கள் நம்மை முடக்கிப் போட்டது. சிறு, குறு நிறுவனங்களில் தொழில் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழந்தனர். இந்தியப் பொருளாதாரம் மாபெரும் சரிவைக் கண்டது.
வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றத் தாண்டி பல துன்பங்கள் சாமானியர்களான நம்மை வாட்டி வதைத்தது.
இந்நிலைமையானது கடந்த சில மாதங்களாக மாறி, சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் மீண்டும் கொரானாத் தொற்று பரவுவது அதிகரித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் சில மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/Sxzvv
Archive Link:https://archive.ph/kPUBR
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழகத்தில் மீண்டும் சில மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பாலிமர் தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, அந்த புகைப்படச் செய்தியை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி சென்ற வருடம் பாலிமர் தொலைக்காட்சியில் வெளிவந்ததாகும். இதை தற்போது வந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
பாலிமர் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழகத்தில் மீண்டும் சில மாவட்டங்களில் ஊரங்கு என்று பரப்பப்படும் தகவலை மறுத்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பாலிமர் நியூஸின் புகைப்படச் செய்தி, சென்ற வருடம் வந்த பழைய புகைப்படச் செய்தியாகும். இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/babu.kasim.90/posts/129990009051044
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=731428191069245&id=100026062111395
Polimer News: https://www.facebook.com/polimernews/posts/3829207273864774
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 5, 2023
Vijayalakshmi Balasubramaniyan
March 18, 2021
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2021
|