schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உலகம் முழுவதும் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதியை கிருஸ்துமஸ் தினமாக கொண்டாடி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக தகவல் ஒன்று பரவி வருகின்றது.
இத்தகவலை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: மாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக அர்ஜூன் சம்பத் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்,
“இது முற்றிலும் பொய்யான தகவல், இதுபோன்ற எந்த ஒரு தருணத்திலும் நான் பேசவில்லை.”
என்று பதிலளித்தார்.
இதனையடுத்து வைரலாகும் தகவல் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டெம்ப்லேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், நியூஸ் 7 தமிழின் இவ்வாறு ஒரு செய்தி வெளிவந்துள்ளதா என்பதை அதன் சமூக ஊடகங்களில் தேடினோம்.
இந்த தேடலில் நியூஸ் 7 தமிழில் இவ்வாறு செய்தி வந்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. ஆகவே நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர், “இது பொய்யானது, இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை” என்று தெளிவுப்படுத்தினார்.
Also Read: பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டதா நாதக?
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகின்றது.
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Arjun Sampath, Hindu Makkal Katchi
Sugitha Sarangaraj, News 7 Tamil, Digital Head
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 22, 2025
Kushel HM
December 13, 2024
Ramkumar Kaliamurthy
December 11, 2024
|