Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கே.என்.நேரு சமீபத்தில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் பங்காரு அடிகளாரின் எதிரில் இருக்கை இருந்தும் அதில் அமராமல் தரையில் அமர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக செந்தில்குமார் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்தாரா என்பதை தெளிவுப்படுத்த அவரது சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் செந்தில்குமார், அமைச்சர் கே.என்.நேரு பங்காரு அடிகளார் முன் தரையில் அமர்ந்த சம்பவம் குறித்த தனது அதிருப்தியை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
ஆனால் இப்பதிவில் எந்த ஒரு இடத்திலும் கே.என்.நேரு அவர்கள் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து திமுக ஐடி விங்கை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இது பொய்யான தகவல் என்று பதிலளித்தனர்.
இதனடிப்படையில் பார்க்கும்போது வைரலாகும் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறினார் எனும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் அணியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தனர்.
Also Read: பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்றாரா அண்ணாமலை?
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என நம் ஆய்வில் கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Newschecker Conversations
Dr. Senthikumar’s Tweet on March 13
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)