schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ஆசிரியர் நிர்மலா தேவியின் வழக்கில் அவருக்கு ஜாமீன் பெற்றுத்தந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குறித்து நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, ”பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கேட்டு வாதாட வரும் உங்களுக்கெல்லாம் எதற்கு மீசை? எடுத்துவிட்டு வரவும்” என்று நீதிமன்ற தரப்பு, நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனை கேள்வி கேட்டதாக அந்த நியூஸ் கார்ட் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் பாஜகவினர் அவரை தாக்கினரா?
நிர்மலா தேவியின் வழக்கறிஞரான பசும்பொன் பாண்டியன் குறித்து பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டில் அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இடும்பாவனம் கார்த்திக்கின் பதிவு ஒன்றிற்கு பதிலளித்து,“முன்னாள் கவர்னர் மற்றும் முக்கிய புள்ளிகள் சம்மந்தபட்டுள்ளனர். நிர்மலா தேவிக்கு ஏன் ஒரு வருடத்திற்கு மேல் ஜாமீன் தராமல் மறுக்கிறார்கள் சந்தேகம் உள்ளது என்று பத்திரிகைகள் மட்டும் அல்ல அன்று சீமான் & அவரது கட்சியினரே கேட்டனர்.
அதே கருத்தை நாம் நீதிமன்றத்தில் கேட்டது தவறா? முழுமையாக விசாரிக்கப்படாமல் ஒரு வருடத்திற்கு மேல் ஒருவருக்கு ஜாமீன் தராமல் மறுப்பது ஒருவரின் சட்ட உரிமையை பறிப்பதாகும் அதனால் ஆஜராகி ஜாமீன் பெற்று தந்தேன். சீமானின் மனைவியே நாளை இப்படி பாதிக்கபட்டால் ஜாமீனில் வெளியில் எடுப்பது தான் என் வேலை தம்பி” என்று நேற்று தெரிவித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த அவரது புகைப்படமே பரவும் நியூஸ்கார்டில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், அதற்கு முன்பாக “சீமான் இவ்வளவு கேவலமான ஆள் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன்” என்பதாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கான கருத்துக்கேட்பு நிகழ்விலும் கலந்து கொண்டு சீமானுக்கு எதிராக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்தே நாம் தமிழர் கட்சியினர் உட்பட பலரும் இந்த நியூஸ்கார்டினை பரப்பி வருகின்றனர்.
தந்தி டிவி பெயரில் இந்த நியூஸ்கார்ட் பரவிய நிலையில், இதுகுறித்து தந்தி டிஜிட்டல் பிரிவு வினோத் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். நம்முடைய கேள்விக்கு பதிலளித்த அவர், “குறிப்பிட்ட நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை; அது போலியாக தந்தி டிவி பெயரில் பரவி வருகிறது” என்று விளக்கமளித்தார்.
Also Read: திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்!
நிர்மலா தேவியின் வழக்கறிஞரான பசும்பொன் பாண்டியன் குறித்து பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with, Vinoth, Thanthi Tv Digital, Dated February 02, 2023
Twitter Post From, Pasumpon Pandian, Dated February 02, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 11, 2025
Ramkumar Kaliamurthy
January 29, 2025
Ramkumar Kaliamurthy
January 29, 2025
|