schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையான பாரத் ஜோடோ யாத்ரா பொது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் திரும்ப வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் போன்ற தேசியத் தலைவர்களைக் காட்டிலும் ராகுல் காந்திக்கு டிவிட்டரில் ஆதரவு அதிகரித்துள்ளது என்று “டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும்! ஜே.பி.நட்டாவின் தவறான தகவல்களும்!!
ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலானது டிசம்பர் 19, 2017 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு அழைத்து சென்றது. இச்செய்தியானது 2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவித்த நேரத்தில் வெளிவந்ததாகும். இச்செய்தியில் ஒரு கருத்துக்கணிப்பு வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. கூடவே ராகுல்காந்தி கோயில்களுக்கு சென்றது குறித்தும், இதன் காரணமாக காங்கிரஸ் 61 இடங்களிலிருந்து அதிகரித்து 77 இடங்களை கைப்பற்றியது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்செய்தியில் இணைக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பு வீடியோவில் இருந்த ஒரு கீ ஃபிரேமையும், வைரலாகும் படத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் பல ஒன்றுமைகள் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.
முதலாவதாக, கீ ஃபிரேமின் மேற்புறம் மற்றும் வலப்புறத்தில் இருந்த எழுத்துகள், வைரலாகும் படத்திலும் அதே இடத்தில் காணப்பட்டது. இரண்டாவதாக, சதவீதங்கள், வரைபடத்தின் நிறம் போன்றவையும் ஒன்றாக இருந்தது. மேலும், செய்தி வாசிப்பாளரும் அவர் நிற்கும் தோரணையும் இரண்டு படங்களிலும் ஒன்றாகவே ஒன்றாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து வைரலாகும் படத்தை கூர்ந்து நோக்கியதில் அகிலேஷ் யாதவ் படத்திற்கு கீழ் அவர் பெயருக்கு பதிலாக குஜராத் முன்னாள் முதல்வர் ‘விஜய் ரூபானி’ பெயர் எழுதி இருப்பதை காண முடிந்தது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு வீடியோவிலிருந்த ஒரு கீ ஃபிரேமையும் எடிட் செய்து, தற்போது நடக்கும் பாரத் ஜோடோ யாத்ராவுடன் தொடர்புப்படுத்தி தவறான தகவலை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர் என அறிய முடிகின்றது.
Also Read: அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?
ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.
Sources
Report By Times of India, Dated December 19, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Vijayalakshmi Balasubramaniyan
August 27, 2024
Ramkumar Kaliamurthy
August 21, 2024
|