schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியது.
Fact: முஸ்லீம் நபர் யானைக்கு தந்தது தேங்காய், இறைச்சி அல்ல.
கேரளாவில் முஸ்லீம் நபர் ஒருவர் தன் மகனுடன் யானைக்கு இறைச்சி தர முயன்றபோது, அந்த யானை அவரை தாக்க முயன்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
கேரளாவில் யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆராய்ந்தோம்.
இதில் இச்சம்பவம் குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. மனோரமாவும் இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 7, 2022 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அச்செய்தியில் கூறப்பட்டிருந்ததாவது, வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் நபீல் மற்றும் அவரது மகனாகும். நபீல் அந்த யானைக்கு உண்ண தேங்காய் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய மகனும் உணவு கொடுக்க ஆசைப்பட யானை அந்த சிறுவனை இழுத்துள்ளது. அந்த யானை ஒரு பெண் யானையாகும். அதன் பெயர் கோலக்காடு மினி ஆகும்.
இதனையடுத்து அந்த யானையின் உரிமையாளர் கோலக்காடு நாசரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டோம். அவர் வைரலாகும் தகவலை பொய்யானது என்று மறுத்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், நபீல் அந்த யானையிடம் தேங்காயை தருவதாக கையை நீட்டி, யானை அதை வாங்க முயற்சிக்கும்போது தேங்காயை தராமல் ஏமாற்றினார். இதுபோல் பலமுறை செய்தார். இதனைத் தொடர்ந்து நபீல் குழந்தையுடன் செல்லும்போது யானை கடுப்படைந்து இவ்வாறு நடந்து கொண்டது என்றார்.
இவரை தொடர்ந்து மலப்புரத்தில் பத்திரிக்கையாளராக இருக்கும் யாசினை தொடர்புக் கொண்டு பேசினோம். இவர் சமயம் மலையாளத்திற்காக இச்செய்தி குறித்து பணிபுரிந்தவராவார். இவரும் கோலக்காடு நாசர் கூறிய அதே தகவலையே கூறினார். மேலும் நபீல் யானை மினிக்கு இறைச்சி கொடுக்கவில்லை என்பதையும் தெளிவு செய்தார்.
சமயம் மலையாளமும் இதே தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் நபீல் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து விளக்கம் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்ட்டிருந்ததை காண முடிந்தது. அதில், நான் யானைக்கு தேங்காயை கொடுத்தேன். அதன்பின் என் மகனும் தேங்காய் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். அதன்பின்னே இச்சம்பவம் நடந்தது. அதில் என் மகனுக்கு சிறிய அளவில் அடிபட்டது. சிறிய அடியாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் யானைக்கு இறைச்சி தந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெளிவாகின்றது.
இந்த பொய் தகவலானது கடந்த வருடமே சமூக வலைத்தளங்களில் பரவியது. நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆய்வு செய்து இத்தகவல் பொய்யானது என்று ஏப்ரல் 20, 2022 அன்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதை இங்கே காணலாம்
Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
கேரளாவில் யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Manorama, Dated April 07, 2022
Report from Samayam Malayalam, Dated April 08, 2022
Facebook Post from Nabeel Kunhappu, Dated April 08, 2022
Conversation With Kolakkadan Nasar
Conversation With Reporter Yasin
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|