schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: பாரத மாதாவை அவமதித்து பேசினார் ராகுல் காந்தி
Fact: பாரத மாதா குறித்து ராகுல் காந்தியின் பேசியதில் பாதிப் பகுதியை மட்டும் வெட்டி, எடிட் செய்து தவறான இத்தகவல் பரப்பப்படுகின்றது.
ராகுல் காந்தி பாரத மாதாவை அவமதித்து பேசியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் ராகுல் காந்தி, “எல்லோரும் இந்த முழக்கத்தை எழுப்புகின்றார்கள். பலர் பாரத் மாதா கீ ஜே என்று கூறுவதை கேட்க முடிகின்றது. ஆனால் பாரதா மாதா யார்? அப்படி என்றால் என்ன?” பேசுவதாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?
ராகுல் காந்தி பாரத மாதாவை அவமதித்து பேசியதாக பரவும் இவ்வீடியோவானது பாரத ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருப்பதையும், அவ்வீடியோவுக்கு காங்கிரஸின் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளப் பிரிவின் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் பதிலளித்திளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததையும் நம் ஆய்வில் காண முடிந்தது.
3 நிமிடம் 39 நொடிகள் இருக்கும் அவ்வீடியோவில் ராகுல் காந்தி பேசியிருந்ததாவது:
“சந்தனா அவர்கள் பாரத் மாதா கீ ஜே எனும் முழக்கத்தை முழங்கினார். இப்போது கேள்வி என்னவென்றால்... எல்லோரும் இந்த முழக்கத்தை எழுப்புகின்றார்கள். பலர் பாரத் மாதா கீ ஜே என்று கூறுவதை கேட்க முடிகின்றது. ஆனால் பாரதா மாதா யார்? அப்படி என்றால் என்ன? நாம் எல்லோரும் ‘ஜே’ என்கிறோமே அந்த பாரத மாதா யார்?
பாரத மாதா என்பது இந்த பூமி. இந்த நாட்டு மக்கள். உங்கள் சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், தந்தைமார்கள், ஏழைகள், பணக்காரர்கள், முதியவர்கள், நாம் எல்லோரும் பாரத மாதாவின் குரலை எதிரொலிக்கும் மக்கள்.... நான் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டேன். பாரத மாதா யார்? எவ்வளவு மக்கள் தொகையை கொண்டவர் அவர்? எவ்வளவு பழங்குடியினர்? எவ்வளவு தலித்துகள்? எவ்வளவு பிற்படுத்தப்பட்ட மக்கள்? எவ்வளவு ஏழைகள்? எவ்வளவு பணக்காரர்கள்?...
நாம் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிடுகிறோம் என்றால், அதற்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்றால், அந்த பாரத மாதா யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்டில் எத்தனை பிற்படுத்தப்பட்டோர், எத்தனை தலித்துகள், எத்தனை ஏழைகள் இருக்கின்றார்கள் என்று தெரியாவிட்டால் ‘பாரத் மாதா கி ஜே” என்று சொல்வது அர்த்தமற்றது...
ஆகவே நம் நாட்டில் சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கிட வேண்டும் என்று நான் நாடாளுன்றத்தில் கூறினேன்.”
தொடர்ந்து தேடுகையில் இந்த ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நவம்பர் 19, 2023 அன்று வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
மொத்தம் 35 நிமிடம் இருக்கும் இவ்வீடியோவின் இரண்டாம் நிமிடத்தில் வைராலாகும் வீடியோவில் காணப்படும் கருத்தை ராகுல் காந்தி பேசி இருப்பதை காண முடிந்தது. ராஜஸ்தானின் பண்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இக்கருத்தை அவர் பேசியுள்ளார்.
Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
ராகுல் காந்தி பாரத மாதாவை அவமதித்து பேசியதாக பரவும் வீடியோத்தகவலானது தவறானது என்பது நமது ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது.
பழங்குடியின மக்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்த மக்கள் இவர்களையெல்லாம் உள்ளடக்கியவர்தான் பாரத மாதா என்று ராகுல் காந்தி பேசிய கருத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
1. Video post by Supriya Shrinate’s X profile, dated 19th Nov 2023.
2. Live Video by Rahul Gandhi Youtube account, dated 19th Nov 2023.
இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|