schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: விவசாயிகள் போராட்டத்தில் தாமாகவே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார் தோனி
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு லண்டன் குருத்வாராவில் எடுக்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”எல்லோருக்கும் உன்னை ஏன் பிடிக்குதுனு தெரியுமா? இராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் செல்லவில்லை கடும் நெருக்கடியிலும் தவிர்த்தார் விவசாயிகள் போராட்டத்தில் தாமாகவே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார் இந்த செயல்பாட்டிற்கு தனி தைரியம் வேண்டும்” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி ஜோதிமணி?
கிரிக்கெட் வீரர் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 17, 2020ஆம் வருடம் குர்ப்ரீத் சிங் ஆனந்த் என்பவர் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுருப்பது நமக்குத் தெரிய வந்தது. மேலும், அப்புகைப்படத்தில் மகேந்திர சிங் தோனியுடன் இடம்பெற்றுள்ள நபரும் இவர்தான் என்பது நமக்கு உறுதியாகியது.
Khalsa Jatha British Isles என்கிற சீக்கிய லண்டன் வழிபாட்டுத்தலத்தின் நிர்வாகத் தலைவர் இவர் என்றும் இவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், அவர் தோனியுடன் லண்டன் குருத்வாராவில் இருக்கும் வேறு சில படங்களையும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 2022ல் தோனி லண்டனில் இருந்ததற்கான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படமே தற்போது கிரிக்கெட் வீரர் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் பரவுகிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
Also Read: இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!
கிரிக்கெட் வீரர் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு லண்டனில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram post from, Gurpreet.singh.anand, Dated July 17, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024
Ramkumar Kaliamurthy
February 24, 2024
|