About: http://data.cimple.eu/claim-review/80ee6880b7fc50ac80f2bdb8f6dc0d0ed2eb23fe47f11997194a50b0     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த நியூஸ்கார்டில், இந்தியாவில் அதிகம் பொய் பேசும் நபர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா நியூஸ் 7 தமிழ்? அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முதலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதன்பின் தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். இதற்கு அவர், “இது போலியான நியூஸ்கார்ட், இதை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதை யாரோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்” என்று விளக்கமளித்தார். இதனடிப்படையில் காணும்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பில் அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பது உறுதியாகின்றது. Also Read: சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா? டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பில் அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக கூறி வைரலான தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Thanthi TV Digital head Testimonial:- (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy September 18, 2024 Ramkumar Kaliamurthy April 5, 2022 Ramkumar Kaliamurthy March 25, 2022
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software