schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
திமுக ஆட்சியில் காபி, மிக்ஸர் வழங்குவதற்கு 47 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
‘நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்ஸர் செலவு 47 கோடி ரூபாய்’ என்று தலைப்பிட்ட பத்திரிக்கை செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு ஆளும் திமுக அரசு குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
Also Read: முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
திமுக ஆட்சியில் காபி, மிக்ஸர் வழங்குவதற்கு 47 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இச்செய்திக்கு அடிப்படையாக விளங்கும் பத்திரிக்கை செய்தி குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் இப்பத்திரிக்கைச் செய்தி சமீபத்தில் வெளிவந்தது அல்ல, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தினகரன் நாளிதழில் வெளிவந்தது என்பதை அறிய முடிந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அச்சமயத்தில் அவரது டிவிட்டர் பக்கத்தில் இப்பத்திரிக்கை செய்தியை பகிர்ந்து, “நமது ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா? முழுநேரமும் இதே வேலையாக இருந்தால் இவ்வளவு செலவு ஆகாதா?” என்று கருத்து தெரிவித்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
தினகரன் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், நீர்வள நிலவளத்திட்ட பணியை ஆய்வு செய்யவும், கூட்டம் நடந்தபோது வழங்கிய காபி, மிக்சர் உள்ளிட்ட செலவுகள், அறிக்கை தயாரிக்க ஆன செலவு மட்டும் ரூ.47 கோடி என்று தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பார்த்த உலக வங்கி அதிர்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தி உண்மையாதுதானா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து ஆய்வு செய்தபோது இதனை தெளிவு செய்ய போதுமான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. இதுக்குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம், இத்தகவல் குறித்த உண்மைகள் ஏதும் வருங்காலத்தில் நமக்கு கிடைத்தால் அதை இக்கட்டுரையுடன் இணைப்போம் என்று நியூஸ்செக்கர் சார்பில் கூறிக் கொள்கின்றோம்.
Also Read: இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக பரவும் புகைப்படம்!
திமுக ஆட்சியில் காபி, மிக்ஸர் வழங்குவதற்கு 47 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பத்திரிக்கைச் செய்தி 5 வருடங்களுக்கு முந்தையது என்பதும், அச்சமயத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்ததால் இச்செய்திக்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் நமது ஆய்வில் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
Dinakaran’s Article, published on June 12, 2017
Dr Ramadoss Tweet, tweeted on June 19, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|