schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவரை அவமதிக்கும் வகையில் அமர்ந்திருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 09) தொடங்கியது. ஆண்டுத் தொடக்கத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டமன்றம் துவங்கியது. ஆனால், ஆளுநர் ரவி தன்னுடைய உரையில், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட சொற்களைப் பேசுவதைத் தவிர்த்த நிலையில் சட்டமன்றத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், தேசியகீதம் ஒலிக்கும் வரையில் கூட இருக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் அவையை விட்டு வெளியேறியபோது அவரை அவமதிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்தார் என்பதாகவும், அதையே திமுகவினர் “பாடம் எடுக்கும் படம்” என்பதாகவும் பகிர்ந்து வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து மரியாதை செலுத்தினார் என்பதாகவும் ஷேர் செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!
ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரமாக அமர்ந்திருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்தோம்.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் முழுமையான வீடியோவை ஆராய்ந்தோம். அப்போது, கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட வார்த்தைகளைத் தவிர்த்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையை விட்டு வேகமாக வெளியேறினார்.
ஆளுநர் வெளியேறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையை முடித்துக் கொண்டு அமர்ந்தார். இதற்கான வீடியோவை இங்கே இணைத்துள்ளோம். குறிப்பிட்ட வீடியோவில் ஆளுநர் வெளியேறுகின்ற காட்சியையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்த புகைப்படத்தையும் எடிட் செய்து இணைத்து குறிப்பிட்ட புகைப்படம் வைரலாகிறது.
Also Read: உதவித்தொகை கிடைக்காத மூதாட்டி என்று வைரலாகும் 2018 ஆம் ஆண்டு செய்திப்புகைப்படம்!
ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரமாக அமர்ந்திருந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video, From PuthiyathalaimuraiTV, Dated January 09, 2023
Twitter Post, From ANI, Dated January 09, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 14, 2025
Ramkumar Kaliamurthy
December 24, 2024
Ramkumar Kaliamurthy
November 26, 2024
|