schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“நட்ராஜ் பென்சில் நிறுவனம் உங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, உங்களுக்கு 1 மாதத்திற்கு 30,000 சம்பளம் கிடைக்கும். முன்பணம் 15,000 பென்சில் பேக்கிங் கிடைக்கும் ஓப்பன் மெட்டீரியல் வீட்டில் டெலிவரி செய்யப்படும் பொருட்கள் பார்சல் செய்யப்படும் சாதாரண மக்கள் செய்யலாம், படித்தவர்கள் செய்யலாம், பெண்கள் செய்யலாம், ஆண்களும் செய்யலாம். வாட்ஸ்அப் எண் 9024309974” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதா?
நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிந்தது. நட்ராஜ் பென்சிலை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமூக ஊடகங்களில் பரவும் இத்தகவல் பொய்யானது என்று தெளிவு செய்து வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதேபோல் நட்ராஜ் பென்சில்ஸ் எனும் ஃபேஸ்புக் பக்கத்திலும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தி பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில் காண்கையில் நட்ராஜ் பென்சில் நிறுவனம் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானானது என்பது நிரூபணமாகின்றது.
இத்தகவலானது தமிழ் தவிர்த்து இந்தி, மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் பரவியுள்ளது. நியூஸ்செக்கர் சார்பில் ஏற்கனவே இதுக்குறித்து ஆய்வு செய்து இம்மொழிகளில் செய்தி வெளியிட்டுள்ளோம். அவற்றை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… வைரலாகும் செய்தி உண்மையானதா?
நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதாக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube Video, from Hindustan Penclis, Dated June 25, 2022
Facebook Post, from Natraj Pencils, Dated May 26, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|