schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
அரசியலை விட்டு வெளியேறப்போவதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நடைப்பெற்று வருகின்றது. இவ்விருவரும் ஒருவரையொருவர் தாக்கி பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், ‘நான் என் பணியை விட்டு பொது வாழ்வில் இறங்கி 18 மாதங்கள் ஆகின்றது. நான் தவறான முடிவை எடுத்துவிட்டோனோ என ஐயமாக உள்ளது’ என்று பிடிஆர் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டு, நிதியமைச்சர் அரசியலை விட்டு விலக முடிவெடித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: பட்டியலின பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா ஆசி வாங்க முயன்றபோது முகம் சுளித்தாரா பூரி சங்கராச்சாரியார்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அரசியலை விட்டு வெளியேறப்போவதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக அமைச்சர் பிடிஆர் வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் டிவீட்டை பதிவிட்டாரா என்பதை அறிய, அவரது டிவிட்டர் பக்கத்தை ஆராய்ந்தோம். இதில் வைரலாகும் டிவீட் காணப்படவில்லை.
இதனையடுத்து நிதியமைச்சரின் அலுவலகத்தை தொடர்புக்கொண்டு வைரலாகும் டிவீட் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் விசாரித்தோம். இதற்கு அவர்கள், இது போலியான டிவீட், இவ்வாறு டிவீட்டை பிடிஆர் பதிவிடவில்லை என்று பதிலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அட்வான்ஸ்ட் டிவிட்டர் சர்ச் முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட்டை பிடிஆர் கடந்த காலங்களில் பதிவிட்டுள்ளாரா என்பதை தேடினோம். இதில் வைரலாகும் டிவீட், கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக அனிதா தற்கொலை செய்துக் கொண்ட தருணத்தில் பதிவிடப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
இதனடிப்படையில் காண்கையில் 5 வருடங்களுக்கு முன்பு பதிவிடப்பட்ட டிவீட்டின் தேதியை மாற்றி தற்போது பதிவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகின்றது.
உண்மையான டிவீட்டையும், எடிட் செய்யப்பட்ட டிவீட்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: UPI பணப் பரிவர்த்தணைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா?
அரசியலை விட்டு வெளியேறப்போவதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் டிவீட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
Tweet shared by Dr. P Thiaga Rajan on 01 September, 2017
Newschecket’s telephonic conversation with PTR Office
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|