About: http://data.cimple.eu/claim-review/a82ffa4c7d9d3b6e0b8492c72f5140e2d1cf78e284bf612b2094ce72     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மைச் சரிபார்ப்பு: தவறான கூற்றுடன் பகிரப்பட்ட வைரலான காணொளி மீரட்டில் இருந்து அல்ல அம்பாலாவில் இருந்து வெளியானது. - By: Sharad Prakash Asthana - Published: Feb 24, 2023 at 12:15 PM புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): இணையத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது, அந்த காணொளியில் சில நபர்கள் ஒரு நிர்வாண மனிதனை அடிப்பதைக் காணலாம். மீரட்டின் பள்ளத்தாக்கு பஜாரில் இந்து பெண்களை கிண்டல் செய்ததற்காக ஒரு முஸ்லீம் இளைஞரை தாக்கியபொழுது அந்த காணொளி எடுக்கப்பட்டதாக சில சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர். விஸ்வாஸ் நியூஸ் இந்த காணொளியை ஆய்வு செய்தபோது, அந்தக் காணொளி பஞ்சாபின் அம்பாலாவில் படமாக்கப்பட்ட பழைய காணொளி என்றும், வகுப்புவாத கோணத்தில் தவறான கூற்றுடன் அது பகிரப்படுகிறது என்பதையும் கண்டறிந்தது. உரிமைகோரல்: முகநூல் பயனர் ‘சனாதன் ஹிந்து’ பிப்ரவரி 8 அன்று இந்த காணொளியை பதிவிட்டு, அதில் “மீரட் பள்ளத்தாக்கு சந்தையில் இந்து பெண்களை கிண்டல் செய்த ஒரு முஸ்லீம் பிடிபட்டார், அவருடைய நிலையைப் பாருங்கள், என்று பதிவிட்டிருந்தார். நாட்டில் உள்ள இந்து மத பெண்களின் தைரியம் ஜெய் ஸ்ரீராம்”. ட்விட்டர் பயனர் @ABHISHEK77381 என்பவரும் இதே கூற்றுடன் இந்த காணொளியை ட்வீட் செய்துள்ளார். (இந்தப் பதிவுகளின் சமூக ஊடக இணைப்புகளில் வன்முறை மற்றும் நிர்வாணம் ஆகியவை அடங்கும், எனவே இங்கு பகிரப்படவில்லை) விசாரணை: வைரலான இந்த கூற்றின் உண்மை தன்மையை சரிபார்க்க ட்விட்டர் பயனர் @ABHISHEK77381 என்பவரால் பதிவிடப்பட்ட அவரது ட்வீட்டை நாங்கள் முதலில் பார்த்தோம். அந்த ட்வீட்டை ஆய்வு செய்ததில், இந்த காணொளி மீரட்டில் எடுக்கப்பட்டதல்ல மாறாக அம்பாலாவில் படமாக்கப்பட்டது என்று கூறியபடி இந்த ட்வீட்டுக்கு மீரட் போலீசார் பதிலளித்திருந்ததை நாங்கள் கவனித்தோம். மேலும், இவ்விவகாரத்தில் மதவாதக் கோணம் இல்லை என்றும், இரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தவறான பதிவுகளை பதிவிட்டதற்காக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்போவதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த காணொளியுடன் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் இதைப் பற்றி நாங்கள் கூகுளில் ஒரு திறந்த தேடலை மேற்கொண்டோம். ஜனவரி 21, 2020 அன்று அமர் உஜாலாவில் இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு செய்தி அறிக்கை வெளியானது பற்றி நாங்கள் அறிந்தோம். இச்செய்திக் கட்டுரையின்படி, அம்பாலாவில் உள்ள ஹல்வாய் பஜார் ஜெயின் பஜார் சௌக்கில், மூன்று சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் இளைஞர் ஒருவரை ஒரு பெண் கையும் களவுமாக பிடித்தபோது இந்த காணொளி படமாக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் சோனு என்ற பவன் என அடையாளம் காணப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் தாயும் ஏனைய பெண்களும் இணைந்து அந்த இளைஞனின் ஆடைகளை கழற்றி அவரை கடுமையாக தாக்கியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றவாளி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அந்த குற்றவாளி மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 20, 2020 அன்று டைனிக் ஜாக்ரன் என்பவரும் இந்த விவகாரம் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த செய்தி அறிக்கையின்படி, அம்பாலா ஜெயின் மார்க்கெட்டில் ஒரு இளைஞன் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததை மக்கள் கையும் களவுமாக பிடித்தனர். மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பலர் அவரை சரமாரியாக தாக்கினர். குறித்த இளைஞன் மூன்று மாணவிகளை பல நாட்களாக கிண்டல் செய்து வந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி முன்பும் ஒரு வகுப்புவாத கூற்றுடன் வைரலானது. அப்போதும்கூட விஸ்வாஸ் நியூஸ் அது குறித்து விசாரணை நடத்தியது. விஸ்வாஸ் நியூஸ் உடனான ஒரு உரையாடலில், அம்பாலா மகளிர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் சுனிதா டாக்கா, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் பவன் குமார் என்றும் அவர் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர் அல்ல என்றும் கூறியிருந்தார். அம்பாலாவில் உள்ள டைனிக் ஜாக்ரனின் கிரைம் நிருபர் தீபக்கிடமும் நாங்கள் பேசினோம். அவர், “வைரலாகும் வீடியோ அம்பாலாவிலிருந்து. இது சுமார் மூன்று வருடங்கள் பழமையான வழக்கு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு இந்து” என்று கூறினார். தவறான கூற்றுடன் காணொளியைப் பகிர்ந்த ‘சனாதன் ஹிந்து‘ என்ற முகநூல் பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஆராய்ந்தோம். அந்த விவரத்தின்படி, அவர் டெல்லியில் வசிக்கிறார், ஒரு சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். முடிவு: பெண்கள் ஒரு நிர்வாண மனிதனைத் தாக்கும் காணொளி அம்பாலாவில் இருந்து வெளியான காணொளி ஆகும். இந்த சம்பவம் ஜனவரி 2020-ல் நடந்த நிகழ்வாகும். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு முஸ்லீம் நபரும் அல்ல, மீரட்டுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. - Claim Review : இந்து பெண்களை கிண்டல் செய்ததற்காக மீரட்டில் முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டனர் - Claimed By : முகநூல் பயனர்: சனாதன் ஹிந்து - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software