Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
‘பிரதமருக்கு தமிழக முதல்வர் கட்டளையிட்டார்’ என்று மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாகக் கூறி ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார். இச்சந்திப்பில் தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்துள்ளார்.
Also Read: தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தி.செந்தில் வேல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டில்,
“நீட் தேர்வு,குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு கட்டளை பிறப்பித்து அதிரடி அஸ்திரம் காட்டியிருக்கிறார்..
மிரட்டிய முத்துவேல் கருணாநிதி, மிரண்ட ஒன்றிய அரசு..”
என்று செந்தில் வேல் பதிவிட்டுள்ளதாக உள்ளது.
இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
‘பிரதமருக்கு தமிழக முதல்வர் கட்டளையிட்டார்’ என்று மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் ட்வீட் செய்ததாகக் கூறி வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.
இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் செந்தில் வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில் வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.
செந்தில் வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Sarcasm (போலிக் கணக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக செந்தில் வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: ஜெயரஞ்சன் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு டிவீட் செய்தாரா?
‘பிரதமருக்கு தமிழக முதல்வர் கட்டளையிட்டார்’ என்று மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Advanced Search:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025