schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை பாஜகவினர் திருடினர்.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். ஒராண்டுக்கு முன்பு மரக்காணத்தில் மர்ம நபர்கள் இருவர் பிரியாணி அண்டாக்களை திருடினர். இச்செய்தியே திரித்து இவ்வாறு பரப்பப்படுகின்றது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரை ஒன்றை தொடங்கியுள்ளார். ஐந்து கட்டமாக நடக்கவிருக்கும் இந்த யாத்திரையின் தொடக்க விழா நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிலையில் பாஜக தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடியதாக கூறி ஜெயா பிளஸின் செய்தி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?
பாஜக தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் புகைப்படமானது ஜெயா பிளஸின் யூடியூப் தம்பனைல் டெம்ப்ளேட்டை கொண்டிருந்ததால் ஜெயா பிளஸில் யூடியூப் பக்கத்தில் இவ்வாறு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம். இதில் ஜெயா பிளஸ் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருந்ததாக எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை,
இதனையடுத்து, ‘பிரியாணி அண்டா’, ‘அண்டாக்களை திருடிய’ போன்ற கீ வாத்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். இதில் ‘பிரியாணி அண்டாக்களை திருடி சென்ற மர்ம நபர்கள்’ என்று தலைப்பிட்டு ஜெயா பிளஸில் மே 20, 2022 அன்று செய்தி ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்தியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மர்ம இருவர் பாத்திரக் கடை ஒன்றிலிருந்து பிரியாணி அண்டாவை திருடியது சிசிடிவி கேமரா வாயிலாக கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்செய்திக்கு ‘பிரியாணி அண்டாக்களை திருடி சென்ற மர்ம நபர்கள்’ என்று தலைப்பிட்டு வைரலாகும் படத்துடன் தம்ப்னைல் உருவக்கப்பட்டிருந்தது.
அந்த தம்ப்னைலை எடிட் செய்தே மேற்கண்ட போலி தம்ப்னைல் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான தம்ப்னைலையும், எடிட் செய்யப்பட்ட போலி தம்ப்னைலையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
தொடர்ந்து தேடுகையில் சமயம் தமிழ், பப்ளிக் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. எந்த ஒரு செய்தி நிறுவனமும் இச்செயலை செய்தவர் பாஜக தொண்டர்கள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.
கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது யாதென்றால்,
Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?
பாஜக தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Jaya Plus, Dated May 20, 2022
Report from Public, Dated May 20, 2022
Report from Samayam Tamil, Dated May 20, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|