schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: அண்ணாமலையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரம் கேட்கும் மாணவி
Fact: வைரலாகும் புகைப்படம் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையான செய்தியுடன் தொடர்புடையதாகும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மாணவி ஒருவர் பதாகை ஒன்றைப் பிடித்திருப்பதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“எங்களுக்கு நிச்சயமாக சிறந்த பள்ளிகள் தேவை.மாணவியின் குரல்…!சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்க்கும் நாள் ஏப்ரல் 14…!தமிழகத்தின் மாற்றத்திற்கான நாள். இது தாங்க நேரம்..! இனி எல்லாம் மாறும்..!” என்று இப்புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!
அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மாணவி ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த டிசம்பர் 2019ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்டுள்ள ஹைதராபாத் இளம் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது. உண்மையில் அப்புகைப்படத்தில் இருக்கும் மாணவி கைகளில் உள்ள பதாகையில், “I am your Daughter. No more Rape Culture” என்று எழுதியுள்ளது.
குறிப்பிட்ட புகைப்படம், Aljazeera இணையதளத்திலும் ஹைதராபாத் இளம் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் குறித்த செய்தியில் இடம்பெற்றுள்ளது. அதிலும், “I am your daughter. No more rape culture” என்கிற வாசகமே இடம்பெற்றுள்ளது.
ஹைதராபாத் இளம் மருத்துவர் பலாத்கார படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்திலேயே குறிப்பிட்ட மாணவி பதாகையுடன் இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலமாக உறுதியாகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இளம் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்று 4 பேரை சுட்டுக்கொன்ற நிலையில், அது போலியான என்கவுண்டர் என்று சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மாணவி ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report From, BBC, Dated December 03, 2019
News Report From, Aljazeera, Dated December 12, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|