About: http://data.cimple.eu/claim-review/c9eed802265f08bc1e91e92f7edac70f5d91516f04deccbeb5e90f47     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் வீடியோ. Fact: இலங்கை அசோக வனத்திருந்து (வாடிகா) அயோத்திக்கு கல் கொண்டு வரப்பட்டது உண்மையே. ஆனால் வைரலாகும் வீடியோவுக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் 2021 அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்ட அபிதம்மா தினத்திற்காக, இலங்கையிலிருந்து புத்தர் நினைவுச்சின்னம் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தை கொண்டு வந்த நிகழ்வை அயோத்திக்கு கல் கொண்டு வந்த நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி தவறானத் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. “அசோக வனத்தில் சீதா தேவி அமர்ந்திருந்த கல் இலங்கை விமான நிறுவனத்தால் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது. யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பெற்றுக்கொண்டார்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதா? இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில், விமானத்திலிருந்து கொணடு வரப்படும் அப்பொருள் பார்ப்பதற்கு கல் போன்று இல்லாமல், தங்கத்தாலான வேறு ஒரு பொருள் போன்று இருந்ததை காண முடிந்தது. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உத்திரப்பிரதேசத்தின் குஷிநகரில் நடக்கவிருக்கும் அஷ்வின் பூர்ணிமா மற்றும் அபிதம்மா தினத்தில் பார்வைக்கு வைக்க இலங்கையிலிருந்து புத்தரின் நினைவுச்சின்னம் கொண்டு வரப்பட்டதாக கூறி புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்படங்களில் ஒன்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஒரு காட்சியுடன் ஒத்துப்போவதை நம்மால் காண முடிந்தது. தொடர்ந்து தேடுகையில் பிரதமர் மோடி அக்டோபர் 20, 2021 அன்று நடக்கவிருக்கும் அபிதம்மா தின விழாவில் கலந்துக் கொள்ளவிருப்பதாகவும், இவ்விழாவின் முக்கிய சிறப்பம்சம் இலங்கையின் வாஸ்கடுவா ஸ்ரீ சுப்புத்தி ராஜ்விஹாரா கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் நினைவுச்சின்னம்தான் என்றும் கலாச்சார அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவுடன் அந்த நினைவுச்சின்னத்தின் படமும் பகிரப்பட்டிருந்தது. இதனையடுத்து தேடுகையில் இந்தியாவிலிருந்து 6 நாட்களுக்கு பிறகு புத்தர் நினைவுச்சின்னம் இலங்கை வந்து சேர்ந்ததாக இலங்கையின் இந்தியத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையானதா என தேடினோம். இதில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு இலங்கையின் அசோக வாடிகாவிலிருந்து கல் கொடுக்கப்பட்டதாக ANI UP/Uttarakhandஅதன் எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இப்படங்களில் ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட கல்லின் படமும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து தேடுகையில் அயோத்தி ராமர் கோவிலை மேலாண்மை செய்யும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஷேத்ரா (Shri Ram Janmbhoomi Teerth Kshetra) டிரஸ்டின் எக்ஸ் தளப் பக்கத்திலும் இதே தகவல் இதே புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது யாதெனில், Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ! இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும். குஷி நகரில் கொண்டாடப்பட்ட அபிதம்மா தினத்திற்காக இலங்கையிலிருந்து புத்தர் நினைவுச்சின்னம் கொண்டு வரப்பட்ட நிகழ்வை அயோத்திக்கு கல் கொண்டு வந்த நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி தவறானத் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources X Post from Kiren Rijiju, Minister of Earth Sciences, Dated October 20, 2021 X Post from Ministry of Culture, Dated October 19, 2021 X Post from India in Sri Lanka, Dated October 27, 2021 X Post from ANI UP/Uttarakhand, Dated October 28, 2021 X Post from Shri Ram Janmbhoomi Teerth Kshetra, Dated October 28, 2021 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy January 23, 2024 Ramkumar Kaliamurthy January 22, 2024 Ramkumar Kaliamurthy January 22, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software