About: http://data.cimple.eu/claim-review/ca057b55b60b2a6c41d582e09d1e800188af6619b9bfbbd8901451aa     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மை சரிபார்ப்பு: கோவையில் 141 கொரோனா நோயாளிகள் மிளகு தூள், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி கொண்டு குணமடைந்ததாகக் கூறப்படும் பதிவு நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்ல இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 141 கொரோனா நோயாளிகள் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி கலவையுடன் கொதிக்க வைத்த குடிநீரால் குணமடைந்ததாகக் கூறப்படும் பதிவு நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்ல. கர்நாடகா இதன் மூலம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது என்ற செய்தி போலியானது. - By: Abbinaya Kuzhanthaivel - Published: May 12, 2020 at 01:06 PM - Updated: Jul 1, 2020 at 04:28 PM கோவை E S I மருத்துவமனையில் 141 கொரானா நோயாளிகள் குணம் அடைய காரணம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்ததே என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. மேலும், இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள் என்றும் கூறுகிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது. கூற்று கோவை E S I மருத்துவமனையில் 141கொரானா நோயாளிகள் குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி என்று தொடங்கும் வைரலான பதிவு, கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்ததே என்று கூறுகிறது. மேலும், இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள் என்றும் கூறுகிறது. காப்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவின் பதிப்பை இங்கே பார்க்கலாம். விசாரணை உலக சுகாதார அமைப்பின் (WHO) படி கொரோனா வைரஸைத் தடுக்க பதிவில் கூறுவது போல் எந்த மருந்தும் பரிந்துரைக்கப்படவில்லை. WHO தனது பக்கத்தில், “COVID-19 தொற்றுநோய்களின் போது ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். நாம் சாப்பிடுவதும் குடிப்பதும் தொற்றுநோய்களைத் தடுக்கவும், போராடவும், மீட்கவும் நம் உடலின் திறனைப் பாதிக்கும். COVID-19 நோய்த்தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ எந்தவொரு உணவும் அல்லது உணவுப் பொருட்களும் இல்லை என்றாலும், நோயெதிர்ப்பு மண்டலங்களை ஆதரிக்க ஆரோக்கியமான உணவுகள் முக்கியம்,” என்று கூறுகிறது. எனினும், ஆயுஷ் அமைச்சரகம் (மினிஸ்ட்ரி ஆப் ஆயுஷ்) சில எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் உணவுகளை பரிந்துரைக்கிறது. ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் கீழ் துளசி (துளசி), டால்சினியில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் / காபி தண்ணீர் (காதா) குடிக்கவும்(இலவங்கப்பட்டை), கலிமிர்ச் (கருப்பு மிளகு), சுந்தி (உலர் இஞ்சி) மற்றும் முனக்கா(திராட்சை) – ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்க பரிந்துரைக்கிறது. வெல்லம் (இயற்கை சர்க்கரை) மற்றும் / அல்லது புதியவற்றைச் சேர்க்கவும் தேவைப்பட்டால், உங்கள் சுவைக்கு எலுமிச்சை சாறு சேர்க்கவும் பரிந்துரைக்கிறது. விஸ்வாஸ் நியூஸுடன் பேசிய ESI மருத்துவமனை டீன் ஏ நிர்மலா, “நாங்கள் அரசாங்க நெறிமுறையின்படி மருந்துகளை வழங்குகிறோம். நோயாளியின் உணவுத் திட்டத்துடன் ரசம், எலுமிச்சை சாறு, கபாசூர குடிநீர் மற்றும் பிற மல்டிவைட்டமின் மாத்திரைகள் வழங்கினோம். இந்த பொருட்கள் உதவியுள்ளனவா என்பதை ஆராய்ச்சி மட்டுமே சொல்ல முடியும். இதுவரை, கோவிட் நோய்த்தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ உறுதி செய்யப்பட்ட மருந்துகள் இல்லை,” என்று கூறினார். மேலும், கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகா வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தியதாக அந்த இடுகை கூறியுள்ள நிலையில், விக்டோரியா மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளைக் கையாள்வதில் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக உள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறை Dr K ரவியை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. அவர் கூறுகையில், “நாங்கள் எங்கள் நோயாளிகளுக்கு அத்தகைய உணவை வழங்கவில்லை. அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி நாங்கள் மருந்துகளை வழங்கினோம். அதற்கேற்ப அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம்,” என்றார். இப்பதிவு பல்வேறு தளங்களில் வைரலாக உள்ளது. நாங்கள் அதை வாட்ஸ்அப்பில் பெற்றுள்ளோம். நாங்கள் தேடியபோது, அதை ஃபேஸ்புக்கில் மெட்ரோ வணிக தகவல் என்ற பக்கத்தில் கண்டோம். சென்னையிலிருந்து கையாளப்படும் இப்பக்கத்திற்கு 636 பின்தொடர்பவர்கள் உள்ளனர். निष्कर्ष: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 141 கொரோனா நோயாளிகள் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி கலவையுடன் கொதிக்க வைத்த குடிநீரால் குணமடைந்ததாகக் கூறப்படும் பதிவு நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்ல. கர்நாடகா இதன் மூலம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது என்ற செய்தி போலியானது. - Claim Review : உரிமைகோரல் ஆய்வு: கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 141 கொரோனா நோயாளிகள் தண்ணீரில் மிளகு, இஞ்சி, எலுமிச்சை கலவையைப் பயன்படுத்தி குணமடைந்தனர் - Claimed By : METRO Business Information - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software