schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
“உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் கலாச்சாரம், கணவன் இறந்த உடனேயே பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும். தமிழர் கலாச்சாரத்தை மீட்க வேண்டும்” என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read: காபி, மிக்ஸர் வழங்குவதற்கு 47 கோடி ரூபாய் செலவு; 5 வருடங்களுக்கு முந்திய செய்தி திமுக ஆட்சியுடன் தொடர்புப்படுத்தி வைரல்!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் இத்தகவலானது தந்தி தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால் இந்நிறுவனங்கள் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதா என்பதை அறிய இந்நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முன்னதாக நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்ததில், வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று நியூஸ் 7 தமிழ் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.
நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜை தொடர்புக் கொண்டு பேசுகையில், அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று உறுதி செய்தார்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சி சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர்,‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி தெரிவித்தாரா என்பதை தெளிவு செய்ய பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டோம். அவர், இத்தகவல் பொய்யானது, இதை நாராயணன் திருப்பதி தெரிவிக்கவில்லை என்று உறுதி செய்தார்.
Also Read: இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக பரவும் புகைப்படம்!
கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with CTR Nirmalkumar, BJP IT Wing President, Dated June 16, 2022
Phone Conversation with Sugitha Satangaraj, Digital Head, News 7 Tamil, Dated June 16, 2022
Phone Conversation with Vinoth, Thanthi Tv, Dated June 16, 2022
News 7 Tamil’s Tweet, tweeted on June 15, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|