About: http://data.cimple.eu/claim-review/d62c7b15f7e49e6fe3224f4a502436ae7f24454f75c3e817c17ed12b     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact-Check: ஜூலை 1ம் தேதி முதல் 10 ரயில்வே விதிகள் மாற்றப்படும் என்று கூறி வைரலான செய்தி தவறானது - By: Ashish Maharishi - Published: Jun 17, 2023 at 04:47 PM - Updated: Jul 7, 2023 at 05:45 PM புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): ஜூலை 1 முதல் 10 ரயில்வே விதிகள் மாற்றப்படும் என்று கூறி இந்திய ரயில்வே தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய ரயில்வே காத்திருப்போர் பட்டியலை நீக்கும் என்றும், தக்கல் ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் பயணச்சீட்டின் விலையில் 50 சதவீதம் திருப்பித் தரப்படும் என்றும் அந்த வைரல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாஸ் நியூஸ் விசாரணை நடத்தியதில், வைரலான இந்த கூற்று தவறானது என்று கண்டுபிடித்தது. வைரலாகும் செய்தியில் உள்ள சில கூற்றுகள் போலியானவை, மற்றவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. உதாரணமாக, எந்த தட்கல் ரயிலுக்கும் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்துசெய்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டுகள் இன்னும் வழங்கப்பட்டு வருகின்றன. ஏசி வகுப்புகளுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தொடங்கும் விதி 2015 முதல் நடைமுறையில் உள்ளது. கூற்று: கேள்விக்குரிய வைரல் இடுகை விஸ்வாஸ் நியூஸின் வாட்ஸ்அப் டிப்லைன் எண்ணுக்கு ஒரு பயனரால் அனுப்பப்பட்டது. இது முதலில் முகநூல் பயனார ‘ஆப்தி மற்றும் ராகுல் ப்லாக்ஸ்‘ (காப்பக இணைப்பு) மூலம் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. அந்த வைரலான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “ரயில்வே தகவல்” ஜூலை 1, 2023 முதல் ரயில்வேயின் இந்த 10 விதிகள் மாற்றப்படுகின்றன…. 1) காத்திருப்பு பட்டியலின் தொந்தரவு முடிவுக்கு வரும். ரயில்வேயால் இயக்கப்படும் சுவிதா ரயில்களில் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளின் வசதி வழங்கப்படும். 2) ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீதம் தொகை திருப்பி அளிக்கப்படும். 3) ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏசி கோச்சுக்கான டிக்கெட் முன்பதிவு காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், ஸ்லீப்பர் கோச்சில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் முன்பதிவு செய்யப்படும். 4) ஜூலை 1 முதல் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் காகிதமில்லா டிக்கெட் வசதி தொடங்கப்படுகிறது. இந்த வசதிக்குப் பிறகு, சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் காகித டிக்கெட்டுகள் கிடைக்காது, அதற்கு பதிலாக, டிக்கெட் உங்கள் மொபைலில் அனுப்பப்படும். 5) விரைவில் ரயில்வே டிக்கெட் வசதி பல்வேறு மொழிகளில் தொடங்க உள்ளது. இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டிக்கெட்டுகள் கிடைத்து வந்த நிலையில், புதிய இணையதளத்திற்குப் பிறகு, பல்வேறு மொழிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். 6) ரயில்வேயில் டிக்கெட் கிடைப்பது என்பது எப்போதும் எட்டாக் கனியாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஜூலை 1 முதல், சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 7) ஒரு மாற்று ரயில் சரிசெய்தல் அமைப்பு, சுவிதா ரயில் மற்றும் முக்கியமான ரயில்களின் நகல் ரயில்கள் ஆகியவை நெரிசல் நேரங்களில் சிறந்த ரயில் வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 8) ரயில்வே அமைச்சகம் ஜூலை 1 முதல் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ மற்றும் மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடத்தில் சுவிதா ரயில்களை இயக்குகிறது. 9) ஜூலை 1 முதல் பிரிமியம் ரயில்களை ரயில்வே முற்றிலுமாக நிறுத்தப் போகிறது. 10) சுவிதா ரயில்களுக்கான டிக்கெட்டுகளை திருப்பிச் செலுத்தினால் 50% கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படும். இது தவிர, ஏசி-2ல் ரூ.100/-, ஏசி-3ல் ரூ.90/- மற்றும் ஸ்லீப்பரில் ஒரு பயணிக்கு ரூ.60/- கழிக்கப்படும். பொது நலன் கருதி வெளியிடப்பட்டது ரயிலில் அலட்சியமாக தூங்குங்கள், நீங்கள் செல்ல வேண்டிய நிலையத்தை ரயில் வந்தடைந்தவுடன் ரயில்வே உங்களை. எழுப்பி விடும்… 139ஐ அழைத்து உங்கள் PNR இல் வேக் அப் கால் – டெஸ்டினேஷன் அலர்ட் வசதியை நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்கள் இறங்கப் போகும் ரயில் நிலையத்தை ரயில் அடைவதற்கு முன் வேக் அப் கால் – டெஸ்டினேஷன் அலர்ட் வசதியை ரயில்வே தொடங்கியுள்ளது. டெஸ்டினேஷன் அலர்ட் என்றால் என்ன இந்த அம்சத்திற்கு டெஸ்டினேஷன் அலர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வசதியை ஆக்டிவேட் செய்தால், நீங்கள் இறங்க வேண்டிய நிலையம் வருவதற்கு முன்பே மொபைலில் அலாரம் ஒலிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய அலர்ட் என்று தட்டச்சு செய்த பிறகு PNR எண்ணை டைப் செய்ய வேண்டும் 139க்கு அனுப்பவும். 139க்கு அழைக்க வேண்டும். அழைப்பைச் செய்த பிறகு, மொழியைத் தேர்ந்தெடுத்து 7 ஐ டயல் செய்யவும். 7-ஐ டயல் செய்த பிறகு, PNR எண்ணை டயல் செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்த சேவை செயல்படுத்தப்படும் இந்த அம்சத்திற்கு வேக்-அப் கால் என்று பெயரிடப்பட்டுள்ளது. மொபைலை எடுக்கும் வரை மொபைல் பெல் அடிக்கும் இந்த சேவையை செயல்படுத்தினால், ரயில் நீங்கள் இறங்க வேண்டிய நிலையம் வந்து சேருவதற்கு முன் மொபைல் பெல் அடிக்கும். நீங்கள் மொபைலை எடுக்கும் வரை இந்த மணி ஒலித்துக் கொண்டே இருக்கும். மொபைலை எடுத்ததும், ரயில் நிலையம் வரவுள்ளதாக பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். தயவுசெய்து இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்பவும்.” விசாரணை: விசாரணையின் போது, கடந்த காலங்களில் இதுபோன்ற பதிவுகள் பலமுறை வைரலாகியுள்ளது என்பது கூகுல் தேடுதலில் தெரியவந்தது. இதே இடுகையை ஜூன் 2016 (காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு) மற்றும் மார்ச் 2017 (காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு) ஆகியவற்றிலிருந்து முகநூலிலும் காணலாம் என்பது இந்தக் கூற்று ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பதைக் குறிக்கிறது. கூடுதல் தேடுதல் ஜூன் 24, 2016 அன்று NDTV-யின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்திக்கு எங்களைக் கொண்டு சென்றது. அந்த செய்தியில் சமூக ஊடக தளங்களில் கூறப்பட்டுள்ளபடி ஜூலை 1 முதல் காத்திருப்பு பட்டியல் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு மற்றும் ரத்து விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இந்திய ரயில்வே மேற்கோளிட்டு காட்டியுள்ளது. இந்தச் செய்தி தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கூடுதலாக, ஜூன் 30, 2017 அன்று வெளியிடப்பட்ட ரயில்வே அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு, வைரல் செய்தியில் கூறப்பட்ட ஒவ்வொரு கூற்றையும் எடுத்துரைத்து அந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று தெளிவுபடுத்தியது. - காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ஆன்லைனில் மற்றும் ரயில் நிலைய முன் பதிவு மையங்கள் (PRS) மூலமாக விற்கப்படுகின்றன என்பதையும், தட்கல் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறும் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் பத்திரிகைக் குறிப்பு உறுதிப்படுத்தியது. –ஜூலை 2015 முதல் ரயில்வே சுவிதா வகுப்பு ரயில்களை இயக்குகிறது மற்றும் அத்தகைய ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். தேவைப்பட்டால் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளும் அத்தகைய ரயில்களில் கிடைக்கும். சுவிதா ரயில் டிக்கெட்டுகளுக்கான பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே உள்ளது. இதில் புதிய மாற்றம் ஏதும் இல்லை. – நவம்பர் 2015-ல் பணத்தைத் திரும்பப்பெறுவது பற்றிய புதிய விதிகளை ரயில்வே அறிவித்தது. இந்த விதிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன, பின்னர் மாற்றப்படவில்லை. தட்கல் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறும் விதிமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே உள்ள விதியின்படி உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்/ டூப்ளிகேட் தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படமாட்டாது. - சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களுக்கான காகித டிக்கெட்டுகளை நிறுத்தும் திட்டம் மற்றும் ரயிலின் எந்த வகுப்பிலும் அதை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு (அதாவது இ-டிக்கெட்டுகள்), அடையாள அட்டையுடன்கூடிய எஸ்எம்எஸ் செல்லுபடியாகும் ஆதாரமாகும். – தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் 2015 இல் ஏசி வகுப்பிற்கு காலை 10:00 மணியாகவும், ஏசி அல்லாத வகுப்பிற்கு காலை 11:00 மணியாகவும் மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதே ஏற்பாடு தொடர்கிறது. – ரயில்வே ஏற்கனவே அதன் ஹெல்ப்லைன் எண் 139-ல் டெஸ்டினேஷன் அலர்ட் வசதியை இயக்கி வருகிறது. இது தவிர, சில ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் சோதனை அடிப்படையில் காலை 6 மணி முதல் 11 மணி வரை ரயில் வந்து சேருவதற்கான இலவச எச்சரிக்கை சேவையும் தொடங்கப்பட்டது. இதுவும் ஏற்கனவே உள்ளது. இந்த அம்சத்திலும் எந்த மாற்றமும் இல்லை. – டிக்கெட்டுகளை (இ-டிக்கெட்டுகள் மற்றும் (PRS) ரயில் நிலைய முன் பதிவு மையங்கள் மூலமாக எடுக்கும் டிக்கெட்டுகள் ஆகிய இரண்டும்) பிராந்திய மொழிகளில் அச்சிட எந்த திட்டமும் இல் - டூப்ளிகேட் ரயில்களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் தேவைகளின்படி அடையாளம் காணப்பட்ட பிரபலமான வழித்தடங்களில் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறோம். - – நவம்பர் 1, 2015 அன்று ரயில்வே ‘விகல்ப்’ மாற்று ரயில் அளிக்கும் திட்டத்தை (ATAS) அறிமுகப்படுத்தியது. காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளை வழங்குவதே இதன் நோக்கம். இந்த வசதி ஆரம்பத்தில் புது டெல்லி-ஜம்மு, புது டெல்லி-லக்னோ, டெல்லி-ஹவுரா, டெல்லி-சென்னை, டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-செகந்திராபாத் சர்க்யூட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 22, 2017 அன்று, இத்திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சுவிதா ரயிலின் பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கைக்கான முக்கிய வார்த்தைகளுடன் நாங்கள் தேடிப் பார்த்தபோது, IRCTC இணையதளத்தில் இது தொடர்பான தகவல்களை நாங்கள் கண்டோம். மார்ச் 16, 2020 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய ரயில்வே 2014 இல் சுவிதா எக்ஸ்பிரஸ்ஸைத் தொடங்கியது என்று எழுதப்பட்டுள்ளது. அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யலாம். இந்த ரயில்களில் எந்த சலுகையும் இல்லை. பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கையின்படி, இந்த ரயில்களின் கட்டணத்தில் 50 சதவீதம் திருப்பித் தரப்படும். ஏசி 2/முதல் வகுப்பு பயணிகளிடம் இருந்து ரூ.100, ஏசி 3/ஏசி செயர் கார் பயணிகளிடம் இருந்து ரூ.90 மற்றும் உறுதி செய்யப்பட்ட அல்லது ஆர்ஏசி ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ.60 குறைந்தபட்ச ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும். - தட்கல் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கையை IRCTC உதவி இணையதளத்திலும் பார்க்கலாம். உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளில் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று எழுதப்பட்டுள்ளது. - மேலும் தகவலுக்கு வட மத்திய ரயில்வேயின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) அமித் மால்வியாவைத் நாங்கள் தொடர்பு கொண்டபோது, இந்திய ரயில்வேயால் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். சில விதிகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். விஸ்வாஸ் நியூஸ் இந்த கூற்றை ஏற்கனவே மறுத்துள்ளது. உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையை நீங்கள் இங்கே அணுகலாம். விசாரணையின் இறுதிக்கட்டத்தில், போலிச் செய்தியைப் பகிர்ந்த ‘ஆப்தி மற்றும் ராகுல் ப்லாக்ஸ்‘ என்ற முகநூல் பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். அக்டோபர் 13, 2022 அன்று இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டது, மேலும் இவருக்கு 644 பின்தொடர்பவர்கள் உள்ளனர். முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், ஜூலை 1 முதல் இந்திய ரயில்வே விதிகளை மாற்றுவதாகக் கூறிய கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த உரிமைகோரல் பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது, மேலும் தட்கல் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் சுவிதா ரயில்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ரயில்வே அமைச்சகமும் இந்தக் கூற்று போலியானது என்று கூறியுள்ளது - Claim Review : ஜூலை 1 முதல் 10 ரயில்வே விதிகள் மாறும் - Claimed By : முகநூல் பயனர்: அடாபி & ராகுல் வ்லாக்ஸ் - Fact Check : Misleading Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software