About: http://data.cimple.eu/claim-review/fffe000f7284b4f427f8ce5de3d86a6e503942241574dacabaac6593     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மை சரிபார்ப்பு: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை இந்த வைரல் பதிவு தவறானது. ஒரு வருடம் பழமையான செய்தி புகைப்படமே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது. - By: Abbinaya Kuzhanthaivel - Published: Mar 18, 2021 at 04:31 PM செய்தி (புது தில்லி). தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு, தமிழ்நாட்டின் முதல்வர் நாளை முதல் 30 வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளதாகக் கூறுகிறது. இந்தக் கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதியதலைமுறை செய்தி சேனலால் வெளியிடப்பட்ட பழைய செய்தியே தற்போது வைரலாகியுள்ளது. கூற்று தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், “நாளை முதல் மாவட்ட எல்லைகள் மூடல், நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,” என்று குறிப்பிடும் புதியதலைமுறை சேனலின் செய்தி புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவு கால அளவு குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும், இது நாளை முதல் 30 ஆம் தேதி வரை குறிப்பிடுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். விசாரணை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் கட்டுப்பாடுகளை விதித்த சில வாரங்களில், இந்த செய்தி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதைக் நாங்கள் கண்டோம். இதுபோன்ற அறிவிப்பினை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் இந்த செய்தி 24 ஜூன் 2020 அன்று புதிய தலைமுறையின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் மாநில சுகாதார செயலாளர் J.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு அதிகாரி, “இந்த வைரல் பதிவு தவறானது, இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பையும் அரசு இப்போது வெளியிடவில்லை,” என்று கூறினார். இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பேஸ்புக்கில் 4,999 நண்பர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ஒரு வருடம் பழமையான செய்தி புகைப்படமே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது. - Claim Review : நாளை முதல் மாவட்ட எல்லைகள் மூடல், நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது - Claimed By : A.s. Vairamuthu - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software