schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: பீஹாரில் இந்தியாக்கூட்டணி நடத்திய பிரமாண்டக் கூட்டம்.மோடிக்கு எதிராக வடக்கிலும் பேரலை
Fact: இந்த புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு RJD கட்சி நடத்திய பேரணியுடன் தொடர்புடையது. மேலும், இப்புகைப்படம் அதிக கூட்டம் கூடியிருப்பதாக எடிட் செய்யப்பட்டது.
இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணிக்கு கூடிய கூட்டம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் ”மக்கள் நம்பிக்கை பேரணி” நடைபெற்றது. அதில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்நிலையில், “மோடியின் ஆட்சிக்கு இறுதி நாட்களை எண்ண தொடங்கி விட்டார்கள் இந்திய மக்கள்” என்றும், “பீஹாரில் இந்தியாக்கூட்டணி நடத்திய பிரமாண்டக்கூட்டம்.மோடிக்கு எதிராக வடக்கிலும் பேரலை.” என்றும் இந்த பேரணி குறித்து புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திமுகவின் சூர்யா சேவியர், சல்மா உட்பட பலரும் இப்புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!
இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, வைரலாகும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு பாட்னாவின் காந்தி மைதானத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள் நடத்திய பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று, “No “Face” will stand in front of Lalu’s “Base”. Come & Count as much as u can in Gandhi Maidan, Patna #DeshBachao” என்று இந்த புகைப்படத்தை லாலு பிரசாத் யாதவ் பகிர்ந்திருந்தார்.
ஆனால், அந்த புகைப்படமே கூட்டத்தை அதிகமாக்கி காட்டும் வகையில் எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை பல்வேறு செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தியிருந்தன. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். ANI இந்த பேரணியின் பல்வேறு புகைப்படங்களைப் பகிர்ந்து லாலு பிரசாத் யாதவ் பகிர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறியிருந்தது. எனினும், அப்புகைப்படம் எந்த நேர இடைவெளியில் எடுக்கப்பட்டது என்று உறுதியாகவில்லை.
ஆனால், Shamsheer Ahmed என்பவர் இந்த பேரணியின் பல்வேறு புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதிலிருந்த ஒரு புகைப்படம் இந்த புகைப்படத்துடன் ஒன்றியிருந்தது. அதில் காணப்படும் கூட்டத்தை இரண்டு மடங்காக எடிட் செய்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகியது.
மேலும், குறிப்பிட்ட மைதானத்தில் அமைந்திருந்த மரங்கள் லாலு உள்ளிட்டோர் பகிர்ந்திருந்த புகைப்படங்களில் இடம்பெறவில்லை என்பதை பல்வேறு X பயனாளர்களும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர்.
அப்புகைப்படமே, தற்போதைய பாட்னா பேரணியின் புகைப்படம் என்பதாக பரவுகிறது என்பது இதன் மூலம் நமக்கு உறுதியாகியுள்ளது.
Also Read: பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!
இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், அப்போதே இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது குறித்த விமர்சனங்கள் எழுந்ததும் நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report from, NDTV, Dated August 27, 2017
Facebook Post from, Shamsheer Ahmed, Dated August 27, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|