About: http://data.cimple.eu/claim-review/2adff61fdd2d2dec168b247e5dd166abeecf4cd54bc315fa84c91ca3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மை சரிபார்ப்பு: துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு செல்லும் ஒரு நபரின் புகைப்படம் தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது அந்த இடுகை தெளிவற்றது. இந்தப் புகைப்படம் 2018 இல் கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்டவர் மற்றொருவரின் தாயை தவறாகப் பேசியதோடு, கடந்த காலங்களில் அவரிடம் தவறாக நடந்ததையொட்டி, அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் தலையை துண்டித்துவிட்டார் என்பதே உண்மைச் செய்தி. - By: Pallavi Mishra - Published: Sep 15, 2020 at 10:01 PM - Updated: Sep 15, 2020 at 10:08 PM புது தில்லி (விஸ்வாஸ் குழு) துண்டிக்கப்பட்ட தலையுடன் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அவர் தனது சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் தலையைத் துண்டித்ததாகக் கூறி இந்த இடுகை பகிரப்பட்டுவருகிறது. விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்று தெரியவந்தது. தலை துண்டிக்கப்பட்டவர் அந்த நபரின் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. மாறாக அந்த நபரின் தாயிடம் அவர் தவறாக நடந்துகொண்டதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் கடந்த காலங்களில் மோதல்கள் இருந்து வந்திருக்கிறது. அந்த மோதல்கள் மேலும் பெரிதாகவே, அந்த நபர் இவரின் தலையை 2018 இல் துண்டித்தார் என்பதை நாங்கள் விசாரணையில் கண்டறிந்தோம். கூற்று துண்டிக்கப்பட்ட தலையுடன் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு “இந்தியாவைச் சேர்ந்த இந்த நபர் தனது சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். இவரைப் போன்ற ஆண்களே நமக்கு அதிகமாய் தேவைப்படுகின்றனர்,” என்று குறிப்படப்பட்டுள்ளது. அந்த இடுகையை இங்கே காணலாம். விசாரணை இது குறித்து விசாரிக்க, கூகிள் தலைகீழ் பட தேடல் கருவியைப் (Google Reverse Image Search Tool) பயன்படுத்தி இந்தப் புகைப்படத்தைத் தேடிய பொழுது, இந்தச் சம்பவம் 29 செப்டம்பர் 2018 அன்று கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் நடந்திருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இச்சம்பவம் பற்றி Thenewsminute.com இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி, “28 வயதான குற்றம் சாட்டப்பட்ட பசுபதி, கிரிஷின் (28) தலையை மலாவல்லியில் உள்ள நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். கிரிஷ் தனது தாயைப் பற்றி மோசமாகப் பேசியதாகவும், அதுவே அவர்களுக்கு இடையே சண்டையைத் தூண்டியதாகவும் அவர் குறிப்பட்டார்,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 30 அன்று news18.com வெளியிட்ட செய்தியிலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “பசுபதி தனது தாயை மோசமாக பேசியதைத் தொடர்ந்தே கிரிஷின் தலையை அவர் வெட்டினார்,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பெலகாவடி காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு கட்டுரை உறுதிப்படுத்துகிறது. மேலும் அக்கட்டுரையில் “குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பசுபதியின் தாயிடம் கிரிஷ் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பின்பே, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, நண்பர்கள் தலையீடு செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது,” என்று காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறவதாக குறிப்படப்பட்டுள்ளது இந்தக் கூற்றினைச் சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ் மண்டியா துணை பிரிவு டிஎஸ்பி L நவீனை தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த நிகழ்வு நடந்தது 2018 ஆம் ஆண்டு. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். இருவரும் சிறிது காலம் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில் இருவரும் ஏதோ சண்டையிட்டு, அதன் தொடர்ச்சியாக பசுபதி கிரிஷின் தலையினை வெட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கூற்றுக்கள் போல இதில் கற்பழிப்பு வழக்கு எதுவும் இல்லை. அவரின் அறிக்கையின்படி, சண்டையின் போது, கிரிஷ் பசுபதியின் தாயைத் தவறாக பேசியதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறினார். வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது,” என்று முடித்தார் நவீன். இந்த இடுகையைப் பகிர்ந்த பல பயனர்களில் அயோத்தியாவைச் சேர்ந்த பேஸ்புக் பயனர் விகாஷ் Krம் ஒருவர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியும் கடந்த காலத்தில் சென்னையில் நடந்ததாகக் கூறி அதிகமாக பகிரப்பட்டது. அது குறித்த விஸ்வாஸ் நியூஸுன் விசாரணையை இங்கே படிக்கலாம். निष्कर्ष: அந்த இடுகை தெளிவற்றது. இந்தப் புகைப்படம் 2018 இல் கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்டவர் மற்றொருவரின் தாயை தவறாகப் பேசியதோடு, கடந்த காலங்களில் அவரிடம் தவறாக நடந்ததையொட்டி, அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் தலையை துண்டித்துவிட்டார் என்பதே உண்மைச் செய்தி. - Claim Review : இந்தியாவைச் சேர்ந்த இந்த நபர் தனது சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். - Claimed By : FB User விகாஷ் Kr - Fact Check : Misleading Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software