About: http://data.cimple.eu/claim-review/2dbf2e38b58230f6662e6ed475018121946bcafd380b635a06a6077a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact-Check: உத்தரபிரதேச அரசு அதிகாரி ஜோதி மவுரியா பதவியில் இருந்து நீக்கப்படவில்லை, வைரலான கூற்று பொய்யானது - By: Sharad Prakash Asthana - Published: Jul 19, 2023 at 11:24 AM புது தில்லி விஸ்வாஸ் செய்திகள் – விஸ்வாஸ் நியூஸ் இந்த வைரலான கூற்று குறித்து உண்மைச் சரிபார்ப்பை நடத்தி, இது ஒரு வதந்தியே தவிர வேறொன்றுமில்லை என்று கண்டறிந்தது. ஜோதி மவுரியா, PCS அதிகாரி, தற்போது பரேலியின் செம்கேடாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் GM பதவியை வகித்து வருகிறார். உத்தரபிரதேச அரசு அவரை நீக்குவதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த தகவலை பரேலி மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் மற்றும் உத்திரபிரதேச அரசு நியமனம் மற்றும் பணியாளர் துறை கூடுதல் தலைமை செயலாளர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. வைரலாவது என்ன? ‘ஹக் கி ஆவாஸ்’ என்ற முகநூல் பயனாளரிடமிருந்து இந்த வைரல் பதிவு உருவானது. ஜூலை 4 அன்று, “ஜோதி மவுரியா SDM பதவியில் இருந்து நீக்கப்பட்டார்” என்ற தலைப்புடன் ஜோதி மவுரியாவின் புகைப்படத்துடன் இந்த பயனர் பதிவிட்டுள்ளார். ” SDM சாஹிபா மற்றும் அவரது கணவரின் வீடியோ சமூக ஊடகங்களில் சில காலமாக பரவி வருகிறது, இன்று SDM பதவியில் இருந்த ஜோதி மவுரியா அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.” இதே கூற்றை முன்வைத்து, முகநூலில் உள்ள பல பயனர்களும் இந்த இடுகையைப் பகிர்ந்துள்ளனர். விசாரணை: இந்த வைரலான கூற்றை விசாரிக்க, இதனுடன் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் கூகுள் தேடலை செய்தோம். இந்த சம்பவம் குறித்த செய்தி ஒன் இந்தியா இணையதளத்தில் கடந்த ஜூலை 4ம் தேதி வெளியானது. இந்த கட்டுரையின் படி, SDM ஜோதி மவுரியா உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் இதே போன்ற பல பதிவுகள் கூறுகின்றன. எனினும் இது வெறும் வதந்தியே. அவர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை, அவருக்கு எதிராக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விரைவில் அவர் மீது விசாரணை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த வைரலான கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக எந்த செய்தியையும் எந்த இணையதளத்திலும் எங்களால் காண முடியவில்லை. மேலும் தகவல்களைப் பெற, உத்திரப்பிரதேச அரசின் நியமனம் மற்றும் பணியாளர்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியின் அலுவலகத்தை நாங்கள் தொடர்புகொண்டோம். இந்த கூற்றில் உண்மை இல்லை என்றும் அது வெறும் வதந்தி என்றும் அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஜோதி மவுரியா அவரது பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. மேலும், நாங்கள் பரேலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஷஷிகாந்த் திவேதியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்தகைய உத்தரவு வரவில்லை என்றும், இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நகரம்) எங்களுக்குத் தெரிவித்தார். ஜோதி தற்போது ஒரு சர்க்கரை ஆலையில் GM ஆக பணியாற்றி வருகிறார். இன்னொரு விதத்தில், இதுகுறித்து டைனிக் ஜாக்ரன் பரேலி நகர தலைவர் அசோக் குமார் கூறும்போது, “ஜோதி மவுரியாவை அவரது பதவியில் இருந்து நீக்கவில்லை. அவர் செம்கேடா சர்க்கரை ஆலையில் GM ஆக உள்ளார். ஜோதியின் கணவர் அலோக், லக்னோவில் அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார், அது தற்போது விசாரணையில் உள்ளது. இதன் மூலம் PCS அதிகாரி அவரது பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஜூலை 4, 2023 அன்று ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரையின் படி, “பரேலியில் உள்ள செம்கேடா சர்க்கரை ஆலையில் GM ஜோதிக்கும், பிரதாப்கரின் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரியும் நான்காம் வகுப்பு ஊழியரான அலோக் மவுரியாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஜோதி தனது கணவர் அலோக் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார், அதே நேரத்தில் ஜோதி தனக்கு தீங்கு விளைவிக்க சதி செய்ததாக அலோக் குற்றம் சாட்டியுள்ளார்.” இறுதியாக, தவறான கூற்றைக் கூறிய பேஸ்புக் பயனாளர் ‘ஹக் கி ஆவாஸ்‘ என்பவரின் சுயவிவரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். ஜனவரி 9, 2021 அன்று உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்தில் தோராயமாக 5800 பின்தொடர்பவர்கள் உள்ளனர். முடிவுரை: தற்போது பரேலியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் GM ஆக பணியாற்றும் PCS அதிகாரி ஜோதி மவுரியா, அவரது பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் நீக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலான பதிவு ஒரு வதந்தியே தவிர வேறொன்றுமில்லை. - Claim Review : ஜோதி மவுரியா அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். - Claimed By : முகநூல் பயனர்-ஹக் கி ஆவாஸ் - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software