schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மத்திய அரசு குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா என்பவரை இலட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக நியமித்ததிலிருருந்து அங்கு பெரும் குழப்பம் நிலவி வருகின்றது. நிர்வாக சீர்த்திருத்தம் என்ற பெயரில் இவர் கொண்டு வந்த மாற்றங்களும் புதிய சட்டங்களுமே இக்குழப்பங்களுக்கு காரணம்.
இவர் கொண்டு வந்த புதிய மாற்றங்களுள் முக்கியமான மாற்றம் மதுவுக்கு அனுமதி. இதுவரை இலட்சத்தீவில் பங்காராம் எனும் ஒரு தீவைத் தவிர்த்து, மற்ற தீவுகளில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. பிரஃபுல் கோடா பதவியேற்றப்பின் இந்த மதுவிலக்கை நீக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து பாஜகவைச் சார்ந்த அண்ணாமலை அவர்களும், வானதி சீனிவாசன் அவர்களும் பதாகைகளைத் தாங்கி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அண்ணாமலையும் வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் இப்புகைப்படங்களில் உள்ள பதாகைகளில், “மோடி அரசே லட்சத்தீவில் டாஸ்மாக் கடையை திறக்காதே” என்று எழுதப்பட்டுள்ளது. இப்புகைப்படங்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Archive Link: https://archive.ph/dLPI4
Archive Link: https://archive.ph/kkwRA
Archive Link: https://archive.ph/BCzbo
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக கூறி பரவும் புகைப்படங்களின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் வைரலாகும் இப்புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதாகும்.
ஆளும் திமுக அரசு இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மீண்டும் டாஸ்மாக் கடைகள் செயல்பட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை அவர்களும், வானதி சீனிவாசன் அவர்களும் கலந்துக்கொண்டு பதாகைகளைத் தாங்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் இத்தகவலை தங்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவாக பதிவு செய்திருந்தனர்.
அண்ணாமலை அவர்களும், வானதி சீனிவாசன் அவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இப்புகைப்படங்களை எடிட் செய்தே மேற்கண்ட பொய் செய்தி பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படங்களையும், எடிட் செய்யப்பட்டப் படங்களையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
சமூக வலைத்தளங்களில் மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Annamalai’s Twitter Handle: https://twitter.com/annamalai_k/status/1403939876693815297
Vanathi Srinivasan’s Twitter Handle: https://twitter.com/VanathiBJP/status/1403934327100952582
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 28, 2024
Ramkumar Kaliamurthy
December 27, 2024
Ramkumar Kaliamurthy
November 21, 2024
|