schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை சமஸ்கிருத ஸ்லோகம் படிக்க பாஜக கட்டாயப்படுத்தியது.
Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படும் பெண்கள் இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்களாவர்.
“சங்கிகளின் கொடுமையை பாருங்க 99.9 % முஸ்லிம் பெண்கள் படிக்கும் காஷ்மீர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் (சமஸ்கிருத) ஆரத்தி பாராயணம் கண்டிப்பாக படிக்கனும் பிஜேபி அரசின் உத்தரவு” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் எடிட் புகைப்படம்!
காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை சமஸ்கிருத ஸ்லோகம் படிக்க பாஜக கட்டாயப்படுத்தியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்தோம்.
வைரலாகும் வீடியோவில் மாணவிகள் மாணவிகள் பாடும் மேடையில் “Government Girls Higher Secondary School, Sallar (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சல்லார்)” என்று இருப்பதை காண முடிந்தது. பள்ளியின் சுவற்றிலும் இதே வாசகம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இதனை ஆதாரமாக கொண்டு தென் காஷ்மீரிலிருக்கும் இப்பள்ளியின் முதல்வர் மசூதா அக்தரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம்.
மசூதா வைரலாகும் இச்சம்பவம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடந்ததாக தெரிவித்தார். மேலும் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள இரு பெண்களும்முஸ்லீம்கள் அல்ல; அவர்கள் காஷ்மீர் இந்து பண்டிட் பெண்கள் என தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “எங்கள் பள்ளியில் காலை அசெம்பிளி கூட்டத்தின்போது அவ்வப்போது பாடல்கள், கவிதைகள் அல்லது மதரீதியான மந்திரங்களை பாடுவது வழக்கமான ஒன்றேயாகும். இதன்படியே அப்பெண்கள் விநாயகரை போற்றும் அந்த ஸ்லோகத்தை பாடினர். அவர்களின் வகுப்பு பொறுப்பாசிரியரிடம் முன் அனுமதி வாங்கியே அதை பாடினர்.
இந்த வீடியோவானது கடந்த வருடமே வைரலாகியது. அப்போது மாவட்ட கல்வி வாரியத்திடமிருந்து பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. நாங்கள் அந்த மாணவிகள் இருவரும் முஸ்லீம் அல்ல, இந்துக்கள் என்று விளக்கம் அளித்தோம். மேலும் அம்மாணவிகள் மட்டுமே அந்த ஸ்லோகத்தை பாடினர். அவர்களை பின்தொடர்ந்து மற்ற மாணவிகளை பாட சொல்லி வற்புறுத்துதல் போன்ற எந்த சம்பவமும் நிகழ்வில்லை”என்று மசூதா தெரிவித்தார்.
Also Read: சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்!
காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க பாஜக கட்டாயப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation with Masutha Akthar, Principal, Government Higher Secondary School, Sallaar
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 16, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
|